செய்திகள் :

புதிதாக 23 நகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்கிய வோடாஃபோன் - ஐடியா!

post image

வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் புதிதாக 23 நகரங்களில் 5ஜி இணைய சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.

பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதற்கும், அடுத்த தலைமுறை பயனர்களைக் கவரும் வகையிலும் இதனை வோடாஃபோன் - ஐடியா செய்துள்ளது.

ஜியோ, ஏர்டெல் நிறுவனம் 5 ஜி இணைய சேவையை வழங்குவதில் முன்னணியில் இருப்பதால், அவர்களுக்கு ஈடுகொடுத்து தனது பயனர்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக 5ஜி சேவைகளை வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் விரிவாக்கம் செய்து வருகிறது.

அந்தவகையில், அகமதாபாத், ஆக்ரா, ஒளரங்கபாத், கோழிக்கோடு, கொச்சி, இந்தூர், டேராடூன், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னெள, மதுரை, மலப்புரம், மீரட், நாக்பூர், நாசிக், ராஜ்கோட், சோனிபட், சூரத், சிலிகுரி, திருவனந்தபுரம் மற்றும் வதோதரா ஆகிய நகரங்களில் 5 ஜி சேவையைத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் பெங்களூரு, தில்லி, மும்பை, சண்டிகர் மற்றும் பாட்னா ஆகிய நகரங்களில் 5 ஜி சேவையை வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் தொடங்கியிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 23 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அளவற்ற 5 ஜி பயன்பாடு

வோடாஃபோன் - ஐடியா பயனர்கள் ரூ. 299-ல் தொடங்கும் குறிப்பிட்ட பிரீபெட் திட்டங்களுக்கு வரம்பற்ற 5 ஜி சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்! இன்று முதல் அறிமுகம்!

Vodafone Idea (Vi) announcing the extension of 5G network infrastructure into twenty-three more cities.

அதானி பவருக்கு நிலுவை தொகையை செலுத்திய வங்கதேசம்!

புதுதில்லி: அதானி பவர் நிறுவனத்துக்கு ஜூன் மாதம் செலுத்த வேண்டிய மின்சார நிலுவைத் தொகையான 437 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது வங்கதேசம். நிலுவைத் தொகைகள், மின்சாரம் சுமந்த... மேலும் பார்க்க

ஆடி காரின் விற்பனை 14% சரிவு!

புதுதில்லி: சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, தனது அரையாண்டு சில்லறை விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 63 சதவிகிதம் குறைந்து தற்போது 2,128 யூனிட்டுகளாக இருப்பதாக தெரிவித்தது.கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.51 ஆக முடிவு!

மும்பை: இன்றைய அந்நியச் செலவாணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.51 ஆக முடிந்தது. அமெரிக்க நாணயத்தின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில... மேலும் பார்க்க

நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்! இன்று முதல் அறிமுகம்!

நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இன்று (ஜூலை 1) சர்வதேச மின்னணு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா என மூன்று நாடுகளிலும் இன்று ஒரே நாளில் அறிமுகம் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

உலகளாவிய சந்தையின் ஏற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் மீண்ட இந்திய பங்குச் சந்தைகள்!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சீராக முடிந்தன. நிஃப்டி 25,541.80 புள்ளிகளுடனும் சென்செக்ஸ் 90.83 புள்ளிகள் உயர்ந்து 83,697.29 புள்ளிகளுடன் நிலைபெற்றது.பிஎஸ்இ மிட்கேப் மற... மேலும் பார்க்க

குளிா்பதன, சலவை இயந்திரப் பிரிவுகள்: வெளியேறுகிறது பானாசோனிக்

புது தில்லி: இந்தியாவின் குளிா்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), சலவை இயந்திர (வாஷிங் மெஷின்) பிரிவுகளில் இருந்து ஜப்பானிய வீட்டு உபயோக மின்சாதன உற்பத்தி நிறுவனமான பானாசோனிக் வெளியேறுகிறது.இதுகுறித்து நிறுவன ... மேலும் பார்க்க