புதிதாக 23 நகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்கிய வோடாஃபோன் - ஐடியா!
வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் புதிதாக 23 நகரங்களில் 5ஜி இணைய சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.
பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதற்கும், அடுத்த தலைமுறை பயனர்களைக் கவரும் வகையிலும் இதனை வோடாஃபோன் - ஐடியா செய்துள்ளது.
ஜியோ, ஏர்டெல் நிறுவனம் 5 ஜி இணைய சேவையை வழங்குவதில் முன்னணியில் இருப்பதால், அவர்களுக்கு ஈடுகொடுத்து தனது பயனர்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக 5ஜி சேவைகளை வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் விரிவாக்கம் செய்து வருகிறது.
அந்தவகையில், அகமதாபாத், ஆக்ரா, ஒளரங்கபாத், கோழிக்கோடு, கொச்சி, இந்தூர், டேராடூன், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னெள, மதுரை, மலப்புரம், மீரட், நாக்பூர், நாசிக், ராஜ்கோட், சோனிபட், சூரத், சிலிகுரி, திருவனந்தபுரம் மற்றும் வதோதரா ஆகிய நகரங்களில் 5 ஜி சேவையைத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் பெங்களூரு, தில்லி, மும்பை, சண்டிகர் மற்றும் பாட்னா ஆகிய நகரங்களில் 5 ஜி சேவையை வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் தொடங்கியிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 23 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அளவற்ற 5 ஜி பயன்பாடு
வோடாஃபோன் - ஐடியா பயனர்கள் ரூ. 299-ல் தொடங்கும் குறிப்பிட்ட பிரீபெட் திட்டங்களுக்கு வரம்பற்ற 5 ஜி சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்! இன்று முதல் அறிமுகம்!
Vodafone Idea (Vi) announcing the extension of 5G network infrastructure into twenty-three more cities.