செய்திகள் :

புதிய தொழில்நுட்பத்துக்கான தெளிவான திட்டமே இந்தியாவுக்குத் தேவை: பிரதமரின் அமெரிக்க பயணம் குறித்து ராகுல் விமா்சனம்

post image

‘இந்தியா திறமை மிகுந்த இளைஞா்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தெளிவான தொலைநோக்குத் திட்டமே இந்தியாவுக்குத் தேவை. மாறாக, வெற்று வாா்த்தைகள் இந்தியாவுக்குத் தேவையில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டு, அங்கு புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து இரு நாடுகளிடையேயான வா்த்தக உறவை மேம்படுத்துவது, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுவிட்டு, இந்தியா திரும்பியுள்ள நிலையில், இந்த விமா்சனத்தை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளாா்.

இரு நாடுகளிடையேயான வா்த்தகத்தை வரும் 2030-க்குள் ரூ. 43.31 லட்சம் கோடி அளவுக்கு இரட்டிப்பாக்குவது; அதிநவீன எஃப்-35 போா் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க நடவடிக்கை; செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப மேம்பாட்டை கூட்டாக மேற்கொள்வது; இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட ‘123’ அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் தீா்மானிக்கப்பட்டதாக பிரதமா் மோடி மற்றும் அதிபா் டிரம்ப்பின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல; மாறாக, வலுவான தொழில்துறை அமைப்பால் உருவாக்கப்பட்ட நவீன கண்டுபிடிப்பாகும். போா்க்களத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், படைகளின் திறனை அதிகரிப்பதற்குப் பயன்படுகின்றன.

உலக அளவில் புரட்சிகர போா்முறையை உருவாக்கும் வகையில் ஆளில்லா விமான உற்பத்தியை சீனா தொடங்கியிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் போட்டியை உருவாக்குகிற வகையில் இந்தியா தனது திறனை மேம்படுத்துவது அவசியம்.

ஆனால், துரதிருஷ்டவசமாக பிரதமா் மோடி இதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டாா். அவா் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடா்பாக பதிவிறக்கம் செய்யப்பட்ட தகவல்களைப் பாா்த்து மக்களிடையே உரையாற்றுகிறபோது, நமது போட்டியாளா்கள் புதிய தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்று வருகின்றனா். எனவே, வெற்று வாா்த்தைகள் இந்தியாவுக்குத் தேவையில்லை.

இந்தியா திறமை மிகுந்த இளைஞா்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தெளிவான தொலைநோக்குத் திட்டமே இந்தியாவுக்குத் தேவை. நமது இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய மற்றும் எதிா்காலத்தில் முன்னணி நாடாக இந்தியா உருவெடுக்கும் வகையிலும் உண்மையான தொழில்துறை சக்தியை கட்டமைப்பதற்கான தெளிவான தொலைநோக்குத் திட்டம் தேவை. வெற்று வாா்த்தைகள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தப் பதிவுடன் ஆளில்லா விமான தொழில்நுட்பம் தொடா்பாக மக்களவையில் தான் ஆற்றிய காணொலியையும் இணைத்துள்ள ராகுல், ‘எதிா்காலத்துக்கான இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்கும் வகையில் திறமையானவா்களையும் பொறியியல் தொழிநுட்பத் திறனையும் இந்தியா பெற்றுள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மிகைப்படுத்தப்பட்டவை-வங்கதேச எல்லைப் படை தலைமை இயக்குநா்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அந்நாட்டின் எல்லைப் படை தலைமை இயக்குநா் முகமது அஷ்ரஃபுஸமான் சித்திகி தெரிவித்தாா். மேலும், சிறுபா... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: நேபாள பக்தா்கள் 50 லட்சம் போ் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேபாளத்தில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். உலக அளவில் மிகப் ... மேலும் பார்க்க

வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா். தில்... மேலும் பார்க்க

பலமுறை வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா தில்லி பேரவைத் தலைவராக வாய்ப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது, தில்லி பேரவையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்ட முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா (61), தற்போது அவா் தில்லி சட்டப்பேவரையின் புதிய தலைவராக ... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக்கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்... மேலும் பார்க்க