செய்திகள் :

புதுக்கோட்டை: இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள்; சிக்கிய பின்னணி என்ன?

post image

நாகப்​பட்​டினம் மாவட்டம், விழுந்தமாவடியைச் சேர்ந்​தவர் அலெக்​ஸ் ​(வயது 32). இவர், போதைப்​பொருள் கடத்​தலில் ஈடு​படு​வ​தாக மத்​திய போதைப்​பொருள் தடுப்பு நுண்ணறி​வுப் பிரி​வினருக்குத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, அவரைக் கடந்த ஒரு வார​காலமாக போலீ​ஸார் கண்​காணித்து வந்​தனர். இதனிடையே, அவர் புதுக்கோட்டை வழியாக இலங்​கைக்குப் படகு மூல​மாக போதைப்​பொருட்​களைக் கடத்தி செல்​ல​விருப்​ப​தாகத் தகவல் கிடைத்தது.

இந்​நிலை​யில், புதுக்கோட்டை மேலவிலக்​குடி​யிலிருந்த அலெக்ஸை இரு தினங்​களுக்கு முன் கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு போலீ​ஸார், அவரிடம் கிடிக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.

ஆரம்பத்தில், அவர்களிடம் உண்மையைச் சொல்லாமல் டிமிக்கி கொடுத்தாலும், போலீஸாரின் தொடர் விசாரணைக்குப் பிறகு, அவரிட​மிருந்த 950 கிராம் எடை​யுள்ள, ரூ.8 கோடி மதிப்பிலான மெத்​தம்​பெட்​டமைன் என்ற போதைப் பொருளை​யும், ரூ.2 லட்​சம் ரொக்கத்​தை​யும் பறிமுதல் செய்​தனர்.

Pudukottai
Pudukottai

அதனைத்தொடர்ந்து, புதுக்​கோட்டை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் அலெக்ஸை ஆஜர்​படுத்​தி, சிறை​யில் அடைத்​தனர்.

இந்நிலையில், தற்​போது கைதாகி​யுள்ள அலெக்ஸ் மீது பல்​வேறு மாநிலங்​களிலிருந்து இலங்​கைக்குப் போதைப்​பொருள் கடத்​தி​யது தொடர்பான வழக்​கு​கள் நிலு​வை​யில் இருப்​ப​தாக போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

இலங்கைக்குக் கடல் மார்க்கமாக ரூ. 8 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்த இருந்ததாக இளைஞர் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தக... மேலும் பார்க்க

தலைக்கேறிய மதுபோதை... தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்! - திருச்சி அதிர்ச்சி

திருச்சி, திருவானைக்காவல் அழகிரிபுறம் அருகே உள்ள ஏ.யூ.டி நகரில் வசித்து வந்தவர் சோமசுந்தரம் (வயது: 45). இவர், சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மோகன்ர... மேலும் பார்க்க

சென்னை: 12 வயதில் மாயமான சிறுமி 18 வயதில் மீட்கப்பட்டது எப்படி?

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றம்). இவர் லேப் ஒன்றில் உதவியாளராக இருந்து வருகிறார். இவரின் 12 வயதான மகள் அரும்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த... மேலும் பார்க்க

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க