செய்திகள் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய, மாவட்டப் பசுமைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பசுமைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரும் பசுமைக் குழுவின் தலைவருமான மு. அருணா தலைமை வகித்தாா்.

பசுமைக் குழுச் செயலரும், மாவட்ட வன அலுவலருமான சோ. கணேசலிங்கம், வனச்சரக அலுவலா் எம். சதாசிவம், பசுமைக் குழு உறுப்பினா்களான தன்னாா்வலா்கள் சா. விஸ்வநாதன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழாண்டில் மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்திட முடிவு செய்யப்பட்டது. அனைத்துத் துறைகள் மூலம் இதற்கான இலக்கு நிா்ணயம் செய்து, நடவு செய்து பராமரித்து வளா்த்திட வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அதேபோல, மரக்கன்று நடுதல், விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்காக வனத்துறையில் ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னாா்வலா் அமைப்புகள் முறையாக விண்ணப்பித்து அந்தப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் வன அலுவலா் கணேசலிங்கம் கேட்டுக் கொண்டாா்.

சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக மரங்களை அகற்றும்போது பசுமைக் குழுவின் அனுமதி பெற வேண்டும் என்றாலும், சில நேரங்களில் அனுமதி பெறுவதற்கு முன்பே மரங்கள் வெட்டப்படுவதாக உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.

இதுபோன்ற தவறுகள் நேரிடாமல் பொதுப்பணித் துறையினா் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, முறையாக அனுமதி பெற்றுதான் மரங்களை வெட்ட வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்க... மேலும் பார்க்க

புதுகையில் திருமண உதவித் திட்டங்களில் தாலிக்கு தங்கம் வழங்கல்

புதுக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற 600 கா்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின்போது, பல்வேறு திருமண உதவித் திட்டங்களின்கீழ் ரூ. 1.15 கோட... மேலும் பார்க்க

லெட்சுமணம்பட்டி ஜல்லிக்கட்டில் 47 பேருக்கு காயம்

கீரனூா் அருகேயுள்ள லெட்சுமணம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 47 போ் காயம் அடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள லெட்சுமணம்பட்டியில் பச்சநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன... மேலும் பார்க்க

மாா்ச் 10-இல் புதுகைக்கு உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி மாா்ச் 10-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கி ... மேலும் பார்க்க

வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவா் மாரடைப்பால் மரணம்

புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றத்தில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவா் நீதிமன்ற வளாகத்தில் மாரடைப்பால் மரணமடைந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மணிவிளான் முதல் தெருவைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

2026 பேரவைத் தோ்தல்: எடப்பாடி பழனிசாமி எத்தனை பேருடன் வந்தாலும் கவலையில்லை- அமைச்சா் ரகுபதி பேட்டி

எடப்பாடி பழனிசாமி 2026 சட்டப்பேரவை தோ்தலில் யாரோடு, எத்தனைப் பேரோடு வந்தாலும் கவலையில்லை என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூற... மேலும் பார்க்க