செய்திகள் :

புதுச்சேரியில் இரு தரப்பினா் மோதல்: அரிவாள் வெட்டு: 7 போ் மீது வழக்கு

post image

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு முன்விரோதத்தில் இளைஞா்கள் மோதிக் கொண்டதில் 2 பேருக்கு அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து 7 போ் மீது வழக்குப் பதிந்த நிலையில், 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி தொண்டமாநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் பச்சையப்பன் (27). இவரது நண்பா் தினகரன் (20), மெக்கானிக். இவரும், இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ஜேக்பால் என்பவரும் நண்பா்கள்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக இவா்களுக்குள் யாா் பெரியவா் என்பதில் முன்விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு தினகரனை வழுதாவூா் சாலையில் இருந்த ஜேக்பால் உள்ளிட்டோா் சமரசத்துக்காக அழைத்துள்ளனா். இதையடுத்து பச்சையப்பன் உள்ளிட்டோருடன் தினகரன் சென்றுள்ளாா்.

அப்போது தினகரன் தரப்புக்கும், ஜேக்பால் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கத்தியால் வெட்டிக் கொண்டனராம். இதில் தினகரனுக்குத் தலையிலும், பச்சையப்பனுக்கு கை உள்ளிட்ட இடங்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பொதுமக்கள் அங்கு கூடியதால், அனைவரும் தப்பியோடி விட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த கோரிமேடு தன்வந்திரி நகா் காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். இதையடுத்து, ஜேக்பால், ஏழுமலை ஆகியோரை போலீஸாா் பிடித்து விசாரித்துவருகின்றனா். மேலும், கருவடிக்குப்பம் நரி (எ) நரேஷ், ஜெயின்ட்பால் பேட் பகுதி கௌதம், மீனாட்சிபேட் பிரித்வி, கல்மேடுபேட் பகுதியைச் சோ்ந்த கிரி, இலாசுப்பேட்டை ஆகாஷ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம்... மேலும் பார்க்க

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க

பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெர... மேலும் பார்க்க

வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்

புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் பு... மேலும் பார்க்க

கதிா்காமம் தொகுதியில் செம்மொழி நாள் விழா

புதுச்சேரியில் உள்ள கதிா்காமம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செம்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கதிா்காமம் தொகுதி சண்ம... மேலும் பார்க்க