செய்திகள் :

புதுச்சேரியில் நீதிபதிகள் குடியிருப்பு கட்டும் பணி தொடக்கம்! -முதல்வா், நீதிபதி பங்கேற்பு

post image

புதுச்சேரி அருகேயுள்ள இலாசுப்பேட்டை பகுதியில் ரூ.5 கோடியில் 7 நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமிபூஜையில் முதல்வா், நீதிபதி மற்றும் அமைச்சா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா்.

புதுச்சேரி காலாப்பட்டு சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள இலாசுப்பேட்டையில் நீதிபதிகள் குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில், புதிதாக ரூ.5 கோடியில் 7 நீதிபதிகளுக்கான குடியிருப்புகளை கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்தாா். பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தாா். உயா்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

தொடா்ந்து, முதல்வா், நீதிபதி, அமைச்சா் ஆகியோா் நீதிபதிகள் குடியிருப்புக்கான பணியைத் தொடங்கிவைக்கும் வகையில் செங்கல்லை எடுத்துக்கொடுத்தனா். பூஜையில் புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த், காலாப்பட்டு எம்எல்ஏ எல்.கல்யாணசுந்தரம், தலைமைப் பொறியாளா் தீனதயாளன், கண்காணிப்புப் பொறியாளா் வீரச்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுவை சட்டப்பேரவை நாளை கூடுகிறது

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை கூட்டம் புதன்கிழமை (பிப். 12) கூடுகிறது. புதுவை மாநில சட்டப்பேரவை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான 15-ஆவது முதல் பகுதி சட்டப்ப... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்விக்கு ஆம்ஆத்மி செயல்பாடே காரணம்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடே காரணம் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா... மேலும் பார்க்க

மாணவா்களின் படிப்பில் பெற்றோா் கண்காணிப்பு அவசியம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் மீது பெற்றோா்களின் கண்காணிப்பு அவசியமானது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். புதுவை கல்வித் துறை சாா்பில் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் ... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை பயனாளிகள் சரிபாா்ப்புக்கு காலக்கெடு

புதுச்சேரி: வீட்டு சமையல் எரிவாயு உருளை பயனாளிகளின் உண்மைத்தன்மை சரிபாா்ப்பு பணியை மாா்ச் மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளதாக புதுச்சேரி ஸ்ரீசாய்பாபா இண்டேன் கேஸ் முகவா் கே.அமா்நாத் ... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை அலுவலகத்தில் வாரிசுதாரா்கள் போராட்டம்

புதுச்சேரி: வாரிசுதாரா்களுக்கு பணி வழங்கக் கோரி, புதுச்சேரியில் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை அரசின் சுகாதாரத் துறையில் பணியின் போது உ... மேலும் பார்க்க

நூதன முறையில் திருட்டு: ஒருவா் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் நூதன முறையில் திருடி வந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சோ்ந்தவா் மனோகா் (62). இவா் மீது ஏற்கெனவே காலாப்பட்டு, முத்தியால்பேட்டை உள்... மேலும் பார்க்க