செய்திகள் :

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கித் தாக்குதல்; பெண் எஸ்.ஐ உட்பட 4 காவலர்கள் இடமாற்றம்; பின்னணி என்ன?

post image

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்குத் தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திருந்த தங்க நகைகளைக் காணவில்லை என்று தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.

அதனடிப்படையில் அந்த விடுதியில் பணிபுரிந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 ஊழியர்களை விசாரணைக்கு அழைத்த தவளக்குப்பம் போலீஸார், அவர்களிடம் நள்ளிரவு வரை விசாரணை செய்திருக்கின்றனர்.

புதுச்சேரி போலீஸ் அரங்கேற்றிய கொடூரம்!
புதுச்சேரி போலீஸ் அரங்கேற்றிய கொடூரம்!

மறுநாள் மீண்டும் அவர்களை அழைத்த போலீஸார், "நகை கிடைத்துவிட்டது. நீங்கள் யாரும் திருடவில்லை. நீங்கள் போகலாம்" என்று கூறியிருக்கின்றனர்.

அதற்கடுத்த ஒரு சில தினங்களில் கலையரசி என்ற பெண் ஊழியரின் கணவர் திடீரென மயங்கி உயிரிழந்தார்.

அதையடுத்து, "போலீஸார் என்னை நிர்வாணமாக்கி கொடூரமாகத் தாக்கினார்கள். அந்த மன உளைச்சல் காரணமாகவே என் கணவர் உயிரிழந்துவிட்டார்.

அதற்குக் காரணமான பெண் எஸ்.ஐ சண்முக சத்யா, ஏ.எஸ்.ஐ சுரேஷ், காவலர் வசந்த்ராஜ், பெண் ஊர்காவல் படை வீரர் பிருந்தா உள்ளிட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை என் கணவர் உடலை வாங்க மாட்டேன்’ என்று மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார் கலையரசி.

இந்த சம்பவம் குறித்து கலையரசியின் பேட்டியுடன் 01.06.2025 தேதியிட்ட ஜூ.வி இதழில், `பீரியஸ்ட்ஸ்னு சொல்லியும் நிர்வாணமாக்கி அடிச்சாங்க. வதைபட்ட மனைவி… உயிரிழந்த கணவர்… புதுச்சேரி போலீஸ் அரங்கேற்றிய கொடூரம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

புதுச்சேரி போலீஸ் அரங்கேற்றிய கொடூரம்!

அதன் தொடர்ச்சியாகப் பெண் ஊழியர்கள் மீது கொடூர தாக்குதலில் ஈடுபட்ட தவளக்குப்பம் போலீஸாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பெண் எஸ்.ஐ சண்முக சத்யா, ஏ.எஸ்.ஐ சுரேஷ், காவலர் வசந்த்ராஜ் போன்றவர்களை ஆயுதப் படைக்கும், பெண் ஊர்காவல் படை வீரர் பிருந்தாவை ஊர்காவல் படைப் பிரிவுக்கும் மாற்றப்பட்டிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Seeman: "அதிமுக கூட்டணி; துணை முதல்வர் பதவி; ஆதவ் கொடுத்த வாக்கு" - ரகசியம் சொல்லும் சீமான்!

'சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு!'அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்தால் துணை முதல்வர் ஆக்குகிறோம் என்று ஆதவ் அர்ஜுனா, தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்திப்ப... மேலும் பார்க்க

PMK : 'ராமதாஸ் அய்யா குலசாமி; நான் கட்சித் தலைவர்!' - அன்புமணி திட்டவட்டம்

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இன்று பாமக தலைவர் அன்புமணி இரண்டாவது நாளாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் பேசிய அவர... மேலும் பார்க்க

'பாமக விரிசலுக்கு நான்தான் காரணம்னு சொல்றாங்க, அதைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுதேன்'- ஜி.கே.மணி

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செ... மேலும் பார்க்க

'அகில இந்திய வானொலியின் திருச்சி வானொலியில் பகலில் தமிழ், இரவில் இந்தி...' - துரை வைகோ கண்டனம்

அகில இந்திய வானொலியின் திருச்சி வானொலி 102.1 பண்பலையில் இந்தியில் ஒலிபரப்பு செய்யப்படுவதற்கு மதிமுக முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதி... மேலும் பார்க்க

``பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை வாபஸ் பெறுகிறோம்" - இந்தியக் குழுவை சந்தித்த கொலம்பியா அறிவிப்பு!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்' பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்கில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையில் மத்திய பா.ஜ.க அரசு அனைத்துக் கட்சிக் குழு அமைத்... மேலும் பார்க்க