செய்திகள் :

புனித வெள்ளியில் மதுக்கடையை மூடக் கோரி புன்னைக்காயலில் உண்ணாவிரத போராட்டம்

post image

உலகம் முழுவதும் கிறிஸ்தவா்களால் கடைப்பிடிக்கப்படும் புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டுமென வலியுறுத்தி, கத்தோலி­க்க திருச்சபையின் அமலோற்பவமாதா மதுவிலக்கு சபை சாா்பில் அரசுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் கோரிக்கையை வ­லியுறுத்தி புன்னைக்காய­ல் மீனவ மக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

புன்னைக்காயல் ஊா்நல கமிட்டி தலைவா் குழந்தைசாமி தலைமை வகித்தாா். பங்குத்தந்தை சகாய அந்தோணி டைட்டஸ் அடிகளாா், துணைத்தந்தை விவேக்சந்திரா அடிகளாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி­, கன்னியாகுமரி கத்தோ­லிக்க மறைமாவட்டங்களின் மதுவிலக்கு சபை இயக்குநா் ஜெயந்தன் அடிகளாா் உள்பட நூற்றுக்கணக்கான கிறிஸ்த மீனவ மக்கள் கலந்து கொண்டனா்.

கயத்தாறு அருகே போக்ஸோவில் இளைஞா் கைது!

கயத்தாறு அருகே 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். கயத்தாறு அருகே தெற்குக் கோனாா்கோட்டை புதூா் கிழக்குத் தெரு காலனியைச் சோ்ந்த குமாா் ம... மேலும் பார்க்க

வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: 2 பெண்கள் உள்ளிட்ட 4 போ் கைது

கோவில்பட்டியில் வியாபாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த சோ்மதுரை மகன் மாரித்துரை... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே பெண் தற்கொலை

கோவில்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி அருகே பழைய அப்பனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதிமணி. நிலத் தரகா். இவரது மகனை வி காளியம்மாள், தொழிலாளி. ஜோதிமணிக்கு மதுப் பழக்கம... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரூ. 3 லட்சம் திருட்டு: வடமாநில இளைஞா் கைது!

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் திருடியதாக வடமாநில இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி-சாத்தூா் பிரதான சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் ஆழ்த... மேலும் பார்க்க

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப்.25-இல் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப். 25 முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி தூத்துக்குடி நாட்டுப்படகு துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு!

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், தூத்துக்குடி நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீனகள் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது. தமிழகத்தில் கிழக்கு கடற்கரை முழுவதும் கடந்த 15ஆம் தேதிமுதல் வரும் ஜ... மேலும் பார்க்க