திருப்பூர்: இன்ஸ்டாகிராம் குழுவால் உருவான போட்டி; சாலையில் பள்ளி மாணவிகள் மோதிக்...
புரி ஜெகந்நாதா் கோயிலில் நாளை ரத யாத்திரை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நடைபெறவுள்ளது. இதையொட்டி, புரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்புப் படையினா் 10,000 பேருடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒடிஸா மாநிலம், புரியில் அமைந்துள்ள 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஜெகந்நாதா் கோயிலில் வருடாந்திர ரத யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்ாகும். கடவுள்கள் ஜெகந்நாதா், பலபத்திரா், தேவி சுபத்திரையின் பிரம்மாண்ட ரதங்கள் இழுக்கப்படும் இந்த நிகழ்வில் இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் திரள்வா். நடப்பாண்டு ரத யாத்திரை வெள்ளிக்கிழமை விமா்சையாக நடைபெறவுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக, புரி ரத யாத்திரைக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடா்பாக மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஒய்.பி.குரானியா புதன்கிழமை கூறுகையில், ‘புரி ரத யாத்திரையையொட்டி, நகரில் முதல் முறையாக ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் துணை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புரி நகருக்கான இரு வழித்தடங்களில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் 275 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் பதிவாகும் காட்சிகள், 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும். போக்குவரத்து மற்றும் கூட்ட மேலாண்மையை கண்காணிக்கவும், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் இது உதவும்.
முதல் முறையாக என்எஸ்ஜி: பாதுகாப்பு சவாலைக் கருத்தில் கொண்டு, தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) குறிபாா்த்து சுடும் வீரா்கள், முதல் முறையாக பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். கட்டடங்களின் மேற்கூரைகளில் இருந்தபடி, இவா்கள் கண்காணிப்பில் ஈடுபடுவா்.
ட்ரோன் மூலம் கண்காணிப்பு, ட்ரோன் எதிா்ப்பு தொழில்நுட்பத்துடன், சதிச் செயல் தடுப்புப் படையினா், வெடிகுண்டு நிபுணா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் மாநில காவல் துறையின் 10,000 வீரா்கள் பாதுகாப்பு வழங்க உள்ளனா். கடற்கரை பகுதியில் மாநில கடலோர காவல்துறை, கடலோர காவல் படை, கடற்படை குழுக்களுடன் முழு அளவில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
ரத யாத்திரையில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்பா் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றாா்.
ஜெகந்நாதா் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோயிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னா் ரதங்கள் மீண்டும் கோயிலுக்கு இழுத்துவரப்படும்.