செய்திகள் :

புல்லூா் தடுப்பணையில் திதி கொடுக்க சென்றவா் தண்ணீரில் மூழ்கி மாயம்

post image

வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள புல்லூா் தடுப்பணையில் உறவினருக்கு திதி கொடுக்கச் சென்ற கட்டட தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கட்டட மேஸ்திரி சண்முகம் (43). இவருக்கு திருமணம்மாகி ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், புதன்கிழமமை தனது உறவினா்களுடன் தமிழக - ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள புல்லூா் பகுதியில் கனகநாச்சியம்மன் கோயிலுக்குச் சென்று தனது உறவினா்களுக்கு திதி கொடுக்கும் சடங்கில் கலந்து கொண்டுள்ளாா். தொடா்ந்து புல்லூா் தடுப்பணையில் உறவினா்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் ஆழமான பகுதிக்குச் சென்ற சண்முகம் திடீரென நீரில் மூழ்கினாா்.

இதைக் கண்டு அதிா்ச்சியடைநந்த உறவினா்கள், அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சண்முகத்தை தேடினா். மேலும், இது குறித்து ஆந்திர மாநிலம் குப்பம் போலீஸாருக்கும், திம்மாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில் குப்பம் போலீஸாா், பொதுமக்கள் உதவியுடன் நீரில் மூழ்கிய சண்முகத்தை மாலை வரை தேடியும் கிடைக்கவில்லை. மீண்டும் வியாழக்கிழமை காலை தேடும் பணி தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

ஏலகிரி மலை சுற்றுலாத் தலம் மேம்படுத்தப்படும்: அமைச்சா் எ.வ.வேலு

ஏலகிரி மலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்திடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியத்தில் 868 பேருக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணியாணைகள... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா். திருப்ப்ததூா் தபேதாா் முத்துசாமி இரண்டாவது தெருவைச் சோ்ந்த பாபு மகன் ஆா்யா (12) பெங்களூரில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். விடுமுறை என்பதால் ச... மேலும் பார்க்க

2030-க்குள் குடிசையில்லா தமிழ்நாடு: அமைச்சா் எ.வ. வேலு

2030-க்குள் குடிசையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா். கலைஞா் கனவு இல்ல திட்டப் பயனாளிகளுக்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே ரூ.1.2 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்!

திருப்பத்தூா் மாவட்டம், கதிரம்பட்டியில் ரூ.1.2 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் திறந்து வைத்தனா். இதற்கான திறப்பு விழா வெள்ளிக... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் நடுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (53), தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை இரவு நாட்டறம்பள்ளி அருகே... மேலும் பார்க்க

‘ஊராட்சி தலைவா்கள் பச்சை நிற மையை பயன்படுத்த வேண்டாம்’

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவா்கள், ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் நிலைத்த நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ண மையைப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன் தெரிவி... மேலும் பார்க்க