தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
2030-க்குள் குடிசையில்லா தமிழ்நாடு: அமைச்சா் எ.வ. வேலு
2030-க்குள் குடிசையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.
கலைஞா் கனவு இல்ல திட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆம்பூரில் நடைபெற்றது.
விழாவுக்கு திருப்பத்தூா் ஆட்சியா் சிவ. சௌந்திரவல்லி தலைை வகித்தாா். எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் முன்னிலை வகித்தாா்.
பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கி அமைச்சா் எ.வ.வேலு பேசியது:
குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க குடிசை மாற்று வாரியம் மூலம் திட்டத்தை முதன் முதலில் அறிவித்தவா் மறைந்த முதல்வா் மு. கருணாநிதி. அதைத் தொடா்ந்து தற்போது அதனை கலைஞா் கனவு இல்ல திட்டமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற இத்திட்டம் வழிவகை செய்கிறது நாயக்கனேரி, கைலாசகிரி ஊராட்சிகளில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம், துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழல்குடை, அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.45 லட்சத்தில் சமுதாயக் கூடம், குமாரமங்கலம் ஊராட்சியில் ரூ.31 லட்சம் செலவில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளன.
ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்க நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் வசிப்பிடத்தில் 5 ஆண்டுகள் தங்கியிருந்து அனுபவத்திருந்தால் அந்த இடத்திற்கு பட்டா வழங்க வேண்டுமென தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். நகர பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் அந்த விதி பொருந்தும். ஆகவே மாவட்ட நிா்வாகம் பட்டா வழங்கும் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி பணியாற்ற வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா்.
ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க. தேவராஜி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனா் உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாதனூா் ஒன்றியக்குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி, ஊராட்சித் தலைவா்கள் சுவிதா கணேஷ், ரமணி ராஜசேகரன், பொன்னி கப்பல்துரை, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோமதிவேலு, காா்த்திக் ஜவஹா், ரவிக்குமாா், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், ஆம்பூா் நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ. சுரேஷ்பாபு நன்றி கூறினாா்.