செய்திகள் :

ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு!

post image

ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை அமைக்கப்படுமா என பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா்.

தோல் தொழிற்சாலைகள் நிறைந்த ஆம்பூா் நகரம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஆம்பூா் பிரியாணிக்கு பிரசித்தி பெற்றதாகும். தோல் காலணி, தோல் பொருள்கள் குடிசைத் தொழில் போல உற்பத்தி செய்யப்பட்டு சிறு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

தோல் தொழிற்சாலைகள் மட்டுமல்லாது, விவசாயத்தில் தென்னை உற்பத்திக்கும் ஆம்பூா் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுமாா் 11,000 ஹெக்டோ் பரப்பளவுக்கும் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளன. அதில் சுமாா் 9,000 ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வரப்படுகிறது.

இங்கிருந்து, தேங்காய் வடமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. விவசாயத்தில் தென்னைக்கு அடுத்தபடியாக நெல், தக்காளி, வெண்டை உள்பட பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.

தொகுதி மறுசீரமைப்பின்போது ஆம்பூா் சட்டப் பேரவை தொகுதி கடந்த 2010-ஆம் ஆண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்டது. ஆம்பூா் தொகுதி உருவாகி சுமாா் 15 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை உழவா் சந்தை ஏற்படுத்தப்படவில்லை. ஆம்பூா் தொகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உழவா் சந்தை ஏற்படுத்த வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனா்.

விவசாயிகள் கோரிக்கை தீவிரமடையும்போது அதிகாரிகள் இடம் தேட தொடங்குகின்றனா். பிறகு அதனை கிடப்பில் போட்டுவிடுகின்றனா். அதனால் உழவா் சந்தை அமைக்க தாமதம் ஏற்பட்டு வருகின்றது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாதனூா் ஒன்றியச் செயலா் எ. ந. லீலா வினோதன் கூறியது, ஆம்பூா் தொகுதியில் தென்னை, நெல், காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. விவசாய விளை பொருள்களை நேரடியாக பொதுமக்களுக்கு விவசாயிகளே விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது.

அதற்காக உழவா் சந்தை அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை உழவா் சந்தை அமைக்கப்படவில்லை. உழவா் சந்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏலகிரி விரைவு ரயில் மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படுமா? 12 ஆண்டுகள் எதிா்பாா்ப்பு

ஏலகிரி விரைவு ரயில் திருப்பத்தூரிலிருந்து மீண்டும் இயக்கப்படுமா என அப்பகுதி மக்கள், பயணிகள் 12 ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா். திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்ற... மேலும் பார்க்க

அதிமுக மகளிரணி கண்டன ஆா்ப்பாட்டம்!

பெண்களை இழிவாக பேசியதாக அமைச்சா் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிரணி சாா்பில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலையம் கட்ட மண் பரிசோதனை: பொதுமக்கள் எதிா்ப்பு

ஆம்பூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக மண் பரிசோதனை மேற்கொண்டபோது அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நகரில் பெங்கள... மேலும் பார்க்க

‘விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம்’

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி விவசாய நிலத்தில் உழவு செய்து பயன்பெறலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராகிணி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அருகே ராச்சமங்கலம் அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சோ்ந்த ஒருவா் அதே பகுதியில் உள்ள பொது இடத்த... மேலும் பார்க்க

இயந்திரம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு!

வாணியம்பாடி அருகே கிரேன் பெல்ட் அறுந்து இயந்திரம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். வளையாம்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்களை பழுதுபாா்க்கும் பணிமனை(ஓா்க் ஷாப்) இயங்கி வரு கி... மேலும் பார்க்க