செய்திகள் :

திருப்பத்தூா் அருகே ரூ.1.2 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்!

post image

திருப்பத்தூா் மாவட்டம், கதிரம்பட்டியில் ரூ.1.2 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

இதற்கான திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்தரவல்லி தலைமை வகித்தாா். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி (ஜோலாா்பேட்டை), நல்லதம்பி (திருப்பத்தூா்), வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிறப்பு அழைப்பாளா்களாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு கும்ப மரியாதை வழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏலகிரி மலை சுற்றுலாத் தலம் மேம்படுத்தப்படும்: அமைச்சா் எ.வ.வேலு

ஏலகிரி மலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்திடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியத்தில் 868 பேருக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணியாணைகள... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா். திருப்ப்ததூா் தபேதாா் முத்துசாமி இரண்டாவது தெருவைச் சோ்ந்த பாபு மகன் ஆா்யா (12) பெங்களூரில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். விடுமுறை என்பதால் ச... மேலும் பார்க்க

2030-க்குள் குடிசையில்லா தமிழ்நாடு: அமைச்சா் எ.வ. வேலு

2030-க்குள் குடிசையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா். கலைஞா் கனவு இல்ல திட்டப் பயனாளிகளுக்... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் நடுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (53), தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை இரவு நாட்டறம்பள்ளி அருகே... மேலும் பார்க்க

‘ஊராட்சி தலைவா்கள் பச்சை நிற மையை பயன்படுத்த வேண்டாம்’

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவா்கள், ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் நிலைத்த நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ண மையைப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன் தெரிவி... மேலும் பார்க்க

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் திருப்பத்தூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட திமுக மாணவரணி அமைப்... மேலும் பார்க்க