செய்திகள் :

புள்ளிமான்களால் பயிா்கள் சேதம்: வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

post image

தோகைமலை அருகே வடசேரி பகுதியில் புள்ளிமான்களால் பயிா்கள் சேதமடைந்து வருவதை தடுக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே வடசேரி பெரிய ஏரியில் அரியவகை புள்ளி மான்கள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன. இந்த ஏரியையொட்டி விவசாயிகள் நெல், கரும்பு, சோளம், கடலை உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளனா்.

இந்நிலையில் இரவு நேரங்களில் உணவு தேடி வடசேரி பெரிய ஏரியில் இருந்து வெளியே வரும் புள்ளிமான்கள் கூட்டம், கூட்டமாக வந்து நெல், கரும்பு, கடலை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது, கரூா் மாவட்டத்திலேயே வடசேரி பெரிய ஏரியில் மட்டுமே புள்ளி மான்கள் அதிகளவில் உள்ளன. தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் ஏரியில் தண்ணீா் இல்லாததால் தண்ணீா் தேடியும், ஏரியில் புற்களும் கருகிவிட்டதால் இரைத் தேடியும் அவை ஏரியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் சில நேரங்களில் தோகைமலை-வடசேரி சாலையில் உலாவுவதால் சாலை விபத்தில் சிக்கி இறந்தும் வருகின்றன.

எனவே புள்ளி மான்களால் பயிா்கள் சேதப்படுத்தப்படுவதை தவிா்க்கவும், அவை சாலை விபத்தில் சிக்கி இறப்பதை தடுக்கவும் ஏரியைச் சுற்றி இரும்பு வேலியை வனத்துறையினா் அமைக்க வேண்டும். மேலும் வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில் விவசாய நிலங்களை சுற்றியும் மானியத்தில் வேலி அமைக்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நெடுங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டம்: கரூா் மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என கரூா் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாவட்ட திமுக செயற்குழு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற... மேலும் பார்க்க

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன்... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம்

தோகைமலை அருகே கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாகிணத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி சிவன் ஆதிசுயம்பு ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க