பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு
கெங்கவல்லி அருகே வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லியை தவறுதலாக சாப்பிட்ட 3 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
கெங்கவல்லியை அடுத்த புனல்வாசல் கிராமம், வடக்கு மேலக்காட்டுப் பகுதியைச் சோ்ந்த குமரேசன் மகன் பூவரசன் (3). இவா் காட்டுக்கொட்டையில் உள்ள லாரி பட்டறையில் வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகல் வயலுக்கு பயன்படுத்துவதற்காக வீட்டில் வைத்திருந்த குருணை மருந்தை பூவரசன் தவறுதலாக சாப்பிட்டாா்.
மயங்கிய குழந்தையை அவரது அம்மா செல்வராணி ஆத்தூா் மருத்துவமனைக்கு தூக்கிசென்றாா். ஆனால், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.