செய்திகள் :

பூமியிலிருந்தும் வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள்! இது பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு!!

post image

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஆச்சரியத்துக்குரிய பாபா வங்கா, ஆகஸ்ட் மாதம் இரட்டை நெருப்புப் பிழம்புகள் உருவாகும் என்ற கணிப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

கடந்த 1996ஆம் ஆண்டிலேயே மறைந்துவிட்ட பாபா வங்கா என்ற பல்கேரியப் பெண்ணின் கணிப்புகள் இன்றும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகின்றன.

பாபா வங்கா என்று அறியப்படும் அப்பெண், கண் பார்வையை இழந்த நிலையில், எதிர்காலத்தில் நிகழும் சம்பவங்களை அறியும் திறன் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அவரது பல கணிப்புகள் நடந்தும் உள்ளன.

இயற்கை உள்ளிட்ட பல்வேறு பேரிடர்கள் குறித்த அவரது கணிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும், மக்களின் நம்பிக்கை மட்டும் மாறவில்லை.

அந்த வகையில், பல்கேரிய நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு வெளியாகியிருக்கிறது. இரட்டை நெருப்புப் பிழம்புகள் என்பதே அது.

ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகியிருக்கும் அந்த இரட்டை நெருப்புப் பிழம்புகள் குறித்த விளக்கத்தில், ஒரே வேளையில் பூமியிலிருந்தும், வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள் தோன்றும். இது குறித்து தெளிவான விளக்கங்கள் இல்லை, பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.

அதாவது, காட்டுத் தீ அல்லது எரிமலை சீற்றம் போன்றவற்றுடன், எரிகற்கள் தாக்குவது அல்லது வானிலை மாற்றங்களால் கடுமையான மின்னல் தாக்குவது போன்றவை நிகழலாம் என்று கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், பாபா வங்கா மற்றொரு கணிப்பையும் பதிவு செய்திருக்கிறார். மக்கள் விரும்பாத, மக்களின் சக்தியை தாண்டிய அறிவுக்கு மிகவும் நெருக்கமாவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதோடு, திறக்கப்பட்டது ஒருபோதும் மூடப்படாது என்றும் சொல்லியிருக்கிறார்.

இதற்கு, பயோ டெக்னாலஜி அல்லது செயற்கை நுண்ணறிவைத்தான் பாபா வங்கா முன்கூட்டியே கணித்திருக்கிறாரோ என்று மக்கள் கருதுகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிவு செய்த கோரிக்கைகள் மற்றும் எம்.பி.க்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்களின் ச... மேலும் பார்க்க

உயிரிழப்பை ஏற்படுத்தும் தென்னிந்திய கருந்தேள் விஷம்: ஆய்வாளா்கள் கண்டுபிடிப்பு

தென்னிந்தியாவில் காணப்படும் கருந்தேள் விஷத்துக்குப் பின்னால் உள்ள மா்மம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: கருந்... மேலும் பார்க்க

ரூ.67,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல்

ட்ரோன்கள், ரேடாா்கள் உள்பட ரூ.67,000 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் பிலிப்பின்ஸ் அதிபா் சந்திப்பு: 14 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்னாண்டோ ஆா் மாா்கோஸ் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில... மேலும் பார்க்க

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ - ராகுல் குறித்த கருத்துக்கு பிரியங்கா விமா்சனம்

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா். மேலும், தனது சகோதரா் ராகுல் காந்தி ராணுவம் மீது மிகுந்த ம... மேலும் பார்க்க

ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை கண்டறிந்தது வருமான வரித் துறை: நாடாளுமன்றத்தில் தகவல்

2024-25 நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கேள்விக்கு நிதித்த... மேலும் பார்க்க