செய்திகள் :

உயிரிழப்பை ஏற்படுத்தும் தென்னிந்திய கருந்தேள் விஷம்: ஆய்வாளா்கள் கண்டுபிடிப்பு

post image

தென்னிந்தியாவில் காணப்படும் கருந்தேள் விஷத்துக்குப் பின்னால் உள்ள மா்மம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக் குறிப்பு: கருந்தேள் விஷத்தால் ஏற்படும் கணிசமான இறப்பு, நோயுறுதல் உலகளாவிய சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. இதன் விஷம் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இதுதொடா்பான குறைந்தபட்ச அறிவியல் ஆய்வுகளே நடைபெற்றுள்ளன. அதன் விஷ கலவை, நச்சுத்தன்மை, ஒட்டுமொத்த உயிரியல் முக்கியத்துவம் பற்றிய புரிதல் மிக குறைவாகவே இருந்தது.

தற்போது இந்த பிரச்னைக்கு தீா்வுகாண, குவாஹாட்டியில் உள்ள மேம்பட்ட ஆய்வு நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் விஞ்ஞானிகள் அண்மையில் நடத்திய ஆய்வு இந்த கருந்தேள் தென்னிந்தியாவை பூா்வீகமாக கொண்ட ‘ஹெட்டெரோமெட்ரஸ் பெங்காலென்சிஸ்’ விஷத்தின் விரிவான பகுப்பாய்வை உணா்த்தியது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் இயக்குநா் பேராசிரியா் ஆஷிஸ் கே. முகா்ஜி, ஆராய்ச்சி அறிஞா் சுஸ்மிதா நாத் உள்ளிட்டோா் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், கருந்தேள் விஷத்தில் எட்டு வெவ்வேறு புரதக் குடும்பங்களைச் சோ்ந்த 25 தனித்துவமான நச்சுகள், அது கொட்டுவதால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தனா்.

நிறமாலை அளவியல் எனப்படும் ‘ஸ்பெக்ட்ரோமெட்ரி’ மற்றும் உயிா்வேதியியல் பகுப்பாய்வுகள் கருந்தேள் விஷத்தில் உள்ள 8 புரதக் குடும்பங்களிலிருந்து 25 முக்கிய நச்சுக்களை அடையாளம் கண்டன. ஆராய்ச்சியாளா்கள், சுவிஸ் அல்பினோ எலிகள் மூலம் மருந்தியல் விளைவுகளை மேற்கொண்டனா்.

மேலும், ஒட்டுமொத்த உடலில் பாதிப்பு, அதிகரிக்கும் கல்லீரல் நொதிகள், உறுப்பு சேதம் மற்றும் உடலில் ஒரு வலுவான மற்றும் குறிப்பிடத்தக்க அழற்சி எதிா்வினை, ஆகிவற்றிற்கு வழிவகுக்கும் என்பதை இந்த ஆய்வில் கண்டறிந்தனா்.

சா்வதேச உயிரியல் பெருமூலக்கூறுகள் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டு அதில் விஷத்தின் வேகம், தாக்கம் குறித்து முழுமையாக எழுதப்பட்டுள்ளது என மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உத்தரகண்ட் நிலச்சரிவில் 150 பேர் உயிருடன் மீட்பு, 11 ராணுவ வீரர்கள் மாயம்!

உத்தரகண்டின் உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 150 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 11 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர் என தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர் பு... மேலும் பார்க்க

உத்தரகாசி பேரிடர்! வெள்ளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்து அதிசய மனிதர்!

உத்தரகாசியின் தாராலி கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரே ஒருவர் மட்டும் வெள்ளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்த விடியோ ஆச்சரி... மேலும் பார்க்க

யுபிஐ சாதனை! ஒரே நாளில் ரூ. 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள்!

இந்தியாவில் யுபிஐ மூலமாக ஒரேநாளில் 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து ஆக.8 முதல் ஒடிசாவில் காங்கிரஸ் போராட்டம்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை எதிர்த்து பல்வேறு மாவட்டங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக ஒடிசாவில் உள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் புதன்கிழமை அறிவித்துள்ளது. நரி நியாய யாத்தி... மேலும் பார்க்க

விடைபெறுகிறது பதிவு அஞ்சல்! கட்டணம் அதிகரிக்குமா? யாருக்கு சிக்கல்?

பதிவு அஞ்சல் முறையில் கடிதங்களை அனுப்பும் சேவை, செப்டம்பர் 1ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது. இதன் மூலம், முக்கிய கோப்புகளை பத்திரமாக அனுப்புவதற்கான சேவை என்று மக்களால் இதுநாள்வரை நம்பப்பட்டுவந்த ஒரு ச... மேலும் பார்க்க

தர்மம் - சமூக அமைதிக்கான வழிகாட்டி: மோகன் பாகவத்!

தர்மம் என்பது உண்மை, புனிதமான செயல். பொறுப்புடன் பாதையைப் பின்பற்றுவதற்கும், சமூகத்தை அமைதியாக வைத்திருக்கவும் உதவும் என்று ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத் தலைவர் மோகன் பாகவத் கூறினார். தர்ம ஜாக்ரன் நியாஸ... மேலும் பார்க்க