செய்திகள் :

தர்மம் - சமூக அமைதிக்கான வழிகாட்டி: மோகன் பாகவத்!

post image

தர்மம் என்பது உண்மை, புனிதமான செயல். பொறுப்புடன் பாதையைப் பின்பற்றுவதற்கும், சமூகத்தை அமைதியாக வைத்திருக்கவும் உதவும் என்று ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத் தலைவர் மோகன் பாகவத் கூறினார்.

தர்ம ஜாக்ரன் நியாஸ் அலுவலகத்தின் திறப்பு விழாவில் பேசிய அவர்,

தர்மத்தைப் பின்பற்றுவதும் அதில் உறுதியாக இருப்பதும் நெருக்கடிக் காலங்களில் மக்களுக்கு தைரியத்தையும் உறுதியையும் பெற உதவுகிறது.

தர்மத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது என்றால், நீங்கள் ஒருபோதும் தைரியத்தை இழக்க மாட்டீர்கள். சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'சாவா' திரைப்படத்தை அனைவரும் பார்த்திருக்கிறார்கள்.

பெரியவர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்களும் கூட தர்மத்திற்கு உறுதியுடன் இருக்க தங்களைத் தியாகம் செய்துள்ளனர். அறத்தின் பாதையிலிருந்து மக்கள் விலகாமல் பார்த்துக் கொள்வது சமூகத்தின் பொறுப்பு என்று பாகவத் கூறினார்.

இந்து மதம் போன்ற பன்முகத்தன்மைகளை நிர்வகிக்கும் தர்மம் உலகிற்குத் தேவை. தர்மம் ஒருமையைக் கற்பிக்கிறது மற்றும் பன்முகத்தன்மைகளை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.

நாம் பன்முகத்தன்மை கொண்டவர்கள் ஆனால் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள் அல்ல. நாம் வித்தியாசமாகத் தோன்றினாலும், ஒரே மாதிரியாக இருக்கிறோம் என்பதே இறுதி உண்மை என்று அவர் கூறினார்.

Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat on Wednesday said dharm is the truth and a pious work and following the path with responsibility will help to keep the society peaceful.

இதையும் படிக்க: யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

வீட்டுக்குள் வந்த கங்கை வெள்ளம்! பூஜை செய்த உ.பி. காவலர்கள்

உத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரப் பகுதிகளை மூழ்கடித்துள்ள நிலையில், வீட்டுக்குள் வந்த கங்கைக்கு பல விதமான வரவேற்பு கிடைத்து வருகிறது.வீட்... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் ராகுலுக்கு நிபந்தனை ஜாமீன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க

இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சாட்சி!

இந்தியா மீதான வரிவிதிப்பு பிரச்னைகளுக்கிடையே, இந்தியாவை இறந்த பொருளாதாரம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்தார்.டிரம்ப்பின் இந்த விமர்சனம், இந்தியா மட்டுமின்றி உலக பொருளாதார நாடுகளிடை... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவில் 150 பேர் உயிருடன் மீட்பு, 11 ராணுவ வீரர்கள் மாயம்!

உத்தரகண்டின் உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 150 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 11 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர் என தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர் பு... மேலும் பார்க்க

உத்தரகாசி பேரிடர்! வெள்ளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்து அதிசய மனிதர்!

உத்தரகாசியின் தாராலி கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரே ஒருவர் மட்டும் வெள்ளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்த விடியோ ஆச்சரி... மேலும் பார்க்க

யுபிஐ சாதனை! ஒரே நாளில் ரூ. 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள்!

இந்தியாவில் யுபிஐ மூலமாக ஒரேநாளில் 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்... மேலும் பார்க்க