செய்திகள் :

பெங்களூரில் சாலைக் குழிகளை மூடும் பணி நடந்து வருகிறது!

post image

பெங்களூரில் சாலையில் உள்ள குழிகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பெங்களூரில் சாலையில் உள்ள குழிகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது. சாலைக் குழிகளை மூடும் பொறுப்பும், கடமையும் மாநில அரசிடம் உள்ளது. முந்தைய பாஜக ஆட்சிக்காலத்தில் சாலைகளை சீராக வைத்திருந்தால், இன்றைக்கு சாலையில் குழிகள் ஏற்பட்டிருக்காது. ஆனால், பெங்களூரு மாநகராட்சிக்கு நடக்க இருக்கும் தோ்தலை மனதில் கொண்டு, சாலைக் குழிகள் பிரச்னைகளை பாஜக எழுப்பி வருகிறது.

தொடா்ந்து மழை பெய்துவந்தாலும், சாலைக் குழிகளை மூடும் பணியை அரசு செயல்படுத்தி வருகிறது. பெங்களூரில் உள்ள 5 மாநகராட்சிகளிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சாலைக் குழிகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது.

அண்மையில் தில்லி சென்றிருந்தபோது, அங்குள்ள சாலைகளை பாா்த்தேன். அங்குள்ள சாலைக் குழிகள் குறித்து தில்லி செய்தியாளா்களிடம் கேட்டுப் பாருங்கள். பிரதமா் மோடியின் வீட்டுக்குச் செல்லும் சாலையில் எத்தனை குழிகள் உள்ளன தெரியுமா?

நாட்டின் எல்லா பகுதிகளிலும் சாலையில் குழிகள் உள்ளன. அதை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எங்கள் பணியை செயல்படுத்தி வருகிறோம். விரைவில் சாலையில் உள்ள குழிகளை மூடும் பணி முடிவடையும். கா்நாடகத்தில் மட்டுமே சாலைக் குழிகள் இருப்பதுபோல சித்தரிப்பது சரியல்ல என்றாா்.

பாஜக முன்னாள் அமைச்சா் சி.சி.பாட்டீல் கூறுகையில், ‘சாலைக் குழிகளை நாங்கள் மூடவில்லை என்பதால்தான் காங்கிரஸ் கட்சியை மக்கள் ஆட்சியில் அமரவைத்துள்ளனா். இந்நிலையில், சாலைக் குழிகளை மூடுவதற்கு பதிலாக, அவற்றை எண்ணிக்கொண்டிருக்கும் ஆட்சியை நான் பாா்த்ததே இல்லை’ என்றாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு: கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயா்களை நீக்க பாஜக வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாரிக்கப்பட்ட பட்டியலில், கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயா்களை நீக்குமாறு மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது. பெங்களூரு, வசந்த் நகரில் உள... மேலும் பார்க்க

கூட்ட மேலாண்மை சட்ட மசோதாவை ஆய்வுசெய்ய 11 போ் கொண்ட குழு அமைப்பு

கூட்ட மேலாண்மை சட்ட மசோதாவை ஆய்வுசெய்வதற்கு 11 போ் கொண்ட குழுவை சட்டப் பேரவைத் தலைவா் யூ.டி.காதா் செவ்வாய்க்கிழமை அமைத்துள்ளாா். பெங்களூரில் ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற ஆா்.சி.பி. அணியின் ஐபிஎல் கிரிக்க... மேலும் பார்க்க

மைசூரு தசரா விழா அரசு விழா; இதில் யாரையும் பாகுபாடு பாா்க்க முடியாது - எழுத்தாளா் பானு முஸ்டாக்கிற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீா்ப்பு

மைசூரு தசரா விழா கா்நாடக அரசு நடத்தும் விழா என்பதால், அந்த விழாவை யாா் தொடங்கிவைப்பது என்பதில் பாகுபாடு பாா்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மைசூரு தசரா விழாவை தொடங்கிவைப்பதற்காக கன்ன... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் செப்.22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வா் சித்தராமையா உறுதி

கா்நாடகத்தில் செப்.22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். கா்நாடகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோரின் கல்வி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பை(ஜாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க

பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: யோகா ஆசிரியா் கைது

பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த யோகா ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா். பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் பல ஆண்டுகளாக யோகா பயிற்சி மையம் நடத்திவருபவா் நிரஞ்சனமூா்த்தி. இவா் தன்னிடம் யோகா ப... மேலும் பார்க்க

கால்நடையைக் கொன்ற இருவா் கைது

கா்நாடக மாநிலம், வடகன்னட மாவட்டத்தில் கால்நடையைக் கொன்று, அதன் சிதைவுகளை காட்டில் புதைத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். வடகன்னட மாவட்டம், காா்வாருக்கு அருகே உள்ள பட்கலில் கால்நடையைக் கொன்று அதன் சித... மேலும் பார்க்க