கடற்கரைக்குச் சென்ற கல்லூரி மாணவியை 10 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை: அனைவரும் ...
பெங்களூரு: ` கடை பெயர் பலகையில் கன்னடத்துக்கு முக்கியத்துவம் இல்லை'- வாக்குவாதம் செய்த முதியவர்
பெங்களூரில் உள்ள ஒரு கடையின் பெயர் பலகை அதிகமான கன்னட எழுத்தில் இல்லை என ஒரு முதியவர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இருக்கும் கடைகளில் குறைந்தது 60 சதவீதம் பெயர் பலகைகள் கன்னடத்தில் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதியை புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) போன்ற உள்ளூர் அதிகாரிகள் சரிபார்க்கின்றனர்.
இந்த நிலையில் ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளைக் கொண்ட அறிவிப்பு பலகை ஒரு கடையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பலகையில் கன்னட எழுத்துக்களின் அளவு விதிகளின்படி குறைவாக உள்ளதாக கூறப்பட்டு முதியவர் ஒருவர் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக கடை உரிமையாளர் வீடியோ எடுக்கிறார் அதில்" இந்த நபர் பெயர் பலகை கன்னடமாக மாற்ற என்னை சித்திரவதை செய்கிறார்.
என் பெயர் பலகையில் ஏற்கனவே கன்னட மொழி உள்ளது. ஆனால் அவர் என்னை சித்ரவதை செய்கிறார். நீ யார் எனக்கு இதனை சொல்ல? இது இந்தியா நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல நீ யார்?" என்று அந்த கடை உரிமையாளர் கூறும்படி ஒரு வீடியோ இருக்கிறது.
அதற்கு அந்த நபர் ”இது இந்தியா தான் ஆனால் இது கர்நாடக நிலம், இங்கு விதிகள் உள்ளன. பெயர் பலகையில் 60% கன்னடம் இருக்க வேண்டும், நான் ஒரு கன்னடர், சட்டம் என்ன சொல்கிறதோ அதை தான் நான் கேட்கிறேன் என்றார்" இந்த வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த பதிவிற்கு பதில் அளித்த ஒரு பயனர், ``பெயர் பலகையில் 60% கன்னட மொழி இருக்க வேண்டும். ஆனால் அவரது பெயர் பலகையில் 15 சதவீதம் அல்லது அதற்கு குறைவான எழுத்துக்கள் இருந்தன. விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை அமல்படுத்த சொல்வது துன்புறுத்துவதாக கருதப்பட்டால், நீங்கள் ஒரு சட்டமற்ற சமூகத்தில் தான் வாழ வேண்டும்.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தால் நமக்கு ஏன் மாநிலங்கள் தேவை? மாநிலங்கள் மொழியின் அடிப்படையில் மட்டுமே பிரிக்கப்பட்டன" என்று எழுதி இருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
"This is India, We are living here, you are nobody to tell me what I have to do"
— Ice Candy ಗೋಪಾಲ (@IceCandyGopalaa) June 16, 2025
Honestly, I want them to do these more & more. ಆಗಲಾದರೂ ನಮ್ಮಲ್ಲೇ ಇರೋ ಕೆಲವರಿಗೆ ಜ್ಞಾನೋದಯ ಆಗುತ್ತೆ
Also, Taaataaa pic.twitter.com/knhHofOeLQ