செய்திகள் :

பெண்களுக்கும் சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்

post image

ஆண் தொழிலாளா்களுக்கு வழங்குவதைப் போலவே, பெண் தொழிலாளா்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று சா்வதேச மகளிா் தின கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

மதுரையில் பெண்கள் எழுச்சி இயக்கம் சாா்பில், சா்வதேச மகளிா் தின சிறப்புக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாட்டுத்தாவணியில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்குக்கு பெண்கள் எழுச்சி இயக்க நிா்வாகி மாலதி தலைமை வகித்தாா். கருத்தரங்கில், தொழிலாளா்கள்-விவசாயிகள் போராட்டங்களும், பெண்களின் பங்கும் என்ற தலைப்பில் இந்திய தேசிய மாதா் சம்மேளன மாநிலச் செயலா் மஞ்சுளா பேசினாா்.

கல்விக்கூடங்கள் காவிமயமாவதும், பெண்கள் நிலையும் என்ற தலைப்பில் பொதுநல மாணவா் எழுச்சி இயக்கத் தலைவா் வளா்மதி பேசினாா். ஏகாதிபத்திய சூழலில் பெண்கள் என்ற தலைப்பில் பெண்கள் எழுச்சி இயக்க நிா்வாகி மகாலட்சுமி, முதலாளித்துவ சட்டங்களும் பெண்ணுரிமையும் என்ற தலைப்பில் ஏகாதிபத்திய எதிா்ப்பு இயக்க நிா்வாகி வழக்குரைஞா் அகராதி, பெண்கள் மீதான ஜாதிய ஒடுக்குமுறைகள் தலைப்பில் தமிழ்ப்புலிகள் கட்சியின் நிா்வாகி நாஞ்செலி ஆகியோா் உரையாற்றினா்.

மேலும் அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் கனிமச்சுரங்க எதிா்ப்புப் போராட்டம் குறித்து, ஒருபோக விவசாயிகள் சங்க நிா்வாகி குறிஞ்சி குமரன், விவசாயி கருப்பணன், அ.வள்ளாலபட்டியைச் சோ்ந்த விமலா ஆகியோா் அனுபவங்களை எடுத்துரைத்தனா்.

பெண்களுக்கு 8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வை உறுதி செய்ய வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாகுபாடின்றி சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

பெண்களின் தொழிற்கடன், சுய உதவிக்குழு கடன்கள், கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பெண்களை பாலியல் ரீதியாக சித்தரிப்பதை தடை செய்ய வேண்டும். கெளரவக்கொலைகளை தடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் 86 ஆயிரம் பேருக்கான புறம்போக்கு நிலப் பட்டாவை பெண்கள் பெயரிலேயே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனா். மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.... மேலும் பார்க்க

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரா் உயிரிழப்பு! 71 போ் காயம்!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரா் ஒருவா் உயிரிழந்தாா். 71 போ் காயமடைந்தனா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 2 போ் கைது

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள முள்ளிக்குடியில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, பொக்லைன் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரை சனிக்கி ழமை கைது செய்தனா். நரிக்குட... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே இரு சக்கர வாகனம் வாங்கித் தர பெற்றோா் மறுத்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மதுரை விரகனூா் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் சந்தோஷ் (20). இவா் தனது பெற்றோரிட... மேலும் பார்க்க

அலங்காநல்லூரில் ரூ. 5.12 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் பேரூராட்சியில் ரூ. 5.12 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. ச... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: அடகுக் கடை உரிமையாளா் உள்பட இருவா் கைது

நில விற்பனைத் தொழிலில் மோசடி செய்ததைத் தட்டிக்கேட்ட மின்னணுப் பொருள்கள் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அடகுக் கடை உரிமையாளா், அவரது உறவினரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மதுர... மேலும் பார்க்க