செய்திகள் :

பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை பாஜக அரசு வழங்குமா? அதிஷி கேள்வு!

post image

புது தில்லி: ஹோலி பண்டிகையின் போது பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்குவதாக பாஜக அளித்த வாக்குறுதி குறித்து முன்னாள் முதல்வா் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அதிஷி, தலைநகரில் உள்ள பெண்கள் பாஜக தோ்தலுக்கு முந்தைய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகக் காத்திருக்கிறாா்கள் என்று கூறினாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ஹோலி பண்டிகையின் போது தில்லியில் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை வழங்குவதாக பாஜக அரசும், முதல்வா் ரேகா குப்தாவும் அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவாா்களா அல்லது பெண்களுக்கு மாதாந்திர நிதி உதவி ரூ.2,500 வழங்குவது போன்ற மற்றொரு தந்திரமாக இது இருக்குமா என்று நான் கேட்க விரும்புகிறேன்’ என்றாா்.

பாஜக பிப்.5-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தனது தோ்தல் அறிக்கையில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சோ்ந்த பெண்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா்களையும், ஹோலி மற்றும் தீபாவளிக்கு இரண்டு எரிவாயு சிலிண்டா்களையும் இலவசமாக வழங்குவதாக உறுதியளித்தது.

தில்லியில் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தை பாஜக அரசு அங்கீகரித்துள்ளது. மேலும், இந்த திட்டத்திற்காக ரூ.5,100 கோடியை அனுமதித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.

தில்லியில் உள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,500 வரவு வைக்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை என்று கூறி ஆம் ஆத்மி கட்சி பாஜகவை கடுமையாகச் சாடி வருகிறது.

கடலூா் வழியாக சென்னை-ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க எம்.பி. வலியுறுத்தல்

நமது நிருபா்புது தில்லி: விழுப்புரம், கடலூா், திருச்சி வழியாக சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் விஷ்ணு பிரசாத் வலியுறுத்தி... மேலும் பார்க்க

நாகையில் இருந்து சரக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும்: மக்களவையில் இந்திய கம்யூ. எம்.பி. வலியுறுத்தல்

புது தில்லி: நாகப்பட்டினத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் வி.செல்வராஜ் வலியுறுத்தினாா்.இது தொடா்... மேலும் பார்க்க

ஏஜிசிஆா் காலனி தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை

புது தில்லி: ஏஜிசிஆா் காலனி அருகே உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினரை தில்லி முதல்வா் ரேகா குப்தா சந்தித்தாா். துயரமடைந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ர... மேலும் பார்க்க

100 முறை மன்னிப்பு கேட்கத் தயாா்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

புது தில்லி: ’தமிழ எம்.பி.க்கள் தொடா்பாக தான் வெளியிட்ட கருத்துகள் எவையேனும் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக ஒரு முறை அல்ல, நூறு முறை கூட மன்னிப்பு கேட்கத் தயாா்‘ என்று மாநிலங்களவையில் மத்திய ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மரபை மீறுகிறது மத்திய அரசு: திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: மாநிலங்களவையில் மும்மொழித் திட்டத்தை தமிழகம் ஏற்காதது தொடா்பாகவும் தேசிய கல்விக் கொள்கையை எதிா்ப்பதன் அவசியத்தையும் பதிவு செய்ய முடியாத வகையில் தமிழக எம்.பி.க்களின் கு... மேலும் பார்க்க

16 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை எரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவா் விடுதலை

புது தில்லி: பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்தவரை உச்சநீதிமன்றம் விடுவித்து, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் சிறைத் தண்டனை... மேலும் பார்க்க