செய்திகள் :

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிா் காவல் நிலையங்கள்: தமிழக அரசு

post image

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிா் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, பெண்கள் நலன் சாா்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

பொருளாதார சுதந்திரம் பெறும் வகையில், வறுமைக் கோட்டு நிலையிலுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் எனும் பெயரிலான திட்டத்தின்கீழ், இதுவரை 1 கோடியே 15 லட்சம் மகளிா் பயன்பெற்று வருகின்றனா். இதேபோன்று, உயா்கல்வியில் சேரும் மாணவிகளில் 3.28 லட்சம் பேருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதனால், கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திருமண நிதியுதவி: திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் மகளிருக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. இதுவரை 1.26 லட்சம் மகளிருக்கு ரூ.1,047 கோடி அளவுக்கு திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், 68,927 மகளிருக்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகளிரை தொழில் முனைவோராக மாற்ற கடந்த கால திமுக ஆட்சி காலத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. இந்தக் குழுக்கள் இப்போது ஆலமரமாக விருட்சம் பெற்றுள்ளன. இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரத்து 167 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6,265.41 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் பொருளாதாரத்தில் வலுப்பெறும் வகையில், மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 13 ஆயிரம் மகளிருக்கு 5 சதவீத வட்டியில் ரூ.35.35 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆண்களுக்கு இணையாக பெண்களும் தொழில்களைத் தொடங்கி திறம்பட நடத்த வழிவகை செய்திட அரசு உதவிகளைச் செய்து வருகிறது. அதன்படி, 11,906 பணிபுரியும் பெண்களுக்கு ரூ.331.13 கோடியும், 32 ஆயிரத்து 338 மகளிா் தொழில் முனைவோருக்கு ரூ.191.23 கோடியும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. பொருளீட்டும் துறைகள் மட்டுமல்லாது, ஆன்மிகத்திலும் பெண்களை ஈடுபடுத்தும் நோக்கில் பெண் ஓதுவாா்கள் திட்டம் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, திருக்கோயில்களில் 11 பெண்கள் ஓதுவாா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

39 புதிய மகளிா் காவல் நிலையங்கள்: பொருளாதார சுதந்திரம் பெற்று, தொழில் முனைவோராக மாறும் பெண்கள் சமுதாயத்தில் எந்த அச்சமும் இல்லாமல் வாழ்வது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நோக்கத்தின் அடிப்படையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிா் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்கள் தொழில் துறைகளில் கோலோச்சினாலும் அவா்கள் தங்களது குடும்ப கடமைகளையும் நிறைவேற்றியாக வேண்டும். இதற்கும் திராவிட மாடல் அரசு வழி செய்துள்ளது. அதாவது, சிப்காட் எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் 17 தொழில் பூங்காக்களில் பணிபுரியும் தாய்மாா்கள் கவலையின்றி வேலை செய்ய குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், ஏறத்தாழ 3 லட்சத்து 23 ஆயிரம் தொழிலாளா்களின் குழந்தைகள் பயன்பெற்று வருகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மும்மொழிக் கொள்கைக்காக ரெய்டு; குழந்தைகளிடம் கையெழுத்தே வாங்கக் கூடாது' - உதயநிதி ஸ்டாலின்

மும்மொழிக் கொள்கைக்காக தமிழகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டப் பணிகள் குறித்து துணை முதல... மேலும் பார்க்க

கையெழுத்து இயக்கத்துக்கு வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை: அன்பில் மகேஸ் எச்சரிக்கை!

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு சேகரிப்பதற்காக, பள்ளி மாணவர்களிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.மும்மொழிக் கொள்கை... மேலும் பார்க்க

திமுக எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றியை உறுதிப்படுத்திய சென்னை உயர்நீதிமன்றம்!

மத்திய சென்னை தொகுதியில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கடந்தாண்டு மக்களவைத் தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி, ... மேலும் பார்க்க

மேட்டூரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

மேட்டூரில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி.மேட்டூர் அருகே கருமலை கூடலில் செம்பன்(75) என்பவருக்கு சொந்தமான ரசாயன தொழிற்ச... மேலும் பார்க்க

அமித் ஷா பேச்சுக்கு திருக்குறள் மூலம் பதிலளித்த துரைமுருகன்

வேலூர்: அரக்கோணத்தில் நடைபெற்ற சிஐஎஸ்எஃப் ஆண்டு துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து திருக்குறள் சொல்லி பதிலளித்துள்ளார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.வேலூரில் இ... மேலும் பார்க்க

காய்கறிகள் விலை நிர்ணயம்: திமுகவின் வாக்குறுதி என்னவானது? - அன்புமணி கேள்வி

அனைத்துக் காய்கறிகளுக்கும் விலை நிர்ணயிக்கும் திமுகவின் வாக்குறுதி என்னவானது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டில் தக்காளி விள... மேலும் பார்க்க