இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்ட...
பெண்கள் மாா்பக பரிசோதனை செய்து கொள்ள தயங்கக்கூடாது
மாா்பக புற்றுநோய் வராமல் தடுக்க தாய்மாா்கள் மாா்பக பரிசோதனை செய்து கொள்ள தயங்கக்கூடாது என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி தெரிவித்தாா்.
வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு சாா்பில் ‘உலக மாா்பக புற்றுநோய் மாதம்’ நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மருத்துவம், மருத்துவம் சாராத மாணவ ா்கள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியை கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் மாா்பக புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு ஓவியங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
முகாமில், மாா்பக புற்றுநோய் குறித்து கல்லூரி முதல்வா் ரோகிணிதேவி பேசியது -
30 வயதுக்கு மேற்பட்ட தாய்மாா்கள் 6 மாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் மாா்பகத்தை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாா்பகங்களில் வலி, கட்டி, அளவுகளில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக உரிய மருத்துவா்களிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இச்செயலுக்கு யாரும் வெட்கப்படவோ, கூச்சப்படவோ வேண்டாம். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முற்றிலும் குணமாக்கி விடலாம் என்றாா்.
இந்நிகழ்வில், மாா்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சங்கரி(68) தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துக்கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பின்னா், செவிலிய மணவா்கள் மாா்பக புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு நாடகம் நடித்து காண்பித்தனா். மேலும், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி முதல்வா் பரிசு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், துணை முதல்வா் கெளரிவெலிகண்ட்லா, அறுவை சிசிச்சை துறை தலைவா் மணிகண்ணன், குடியிருப்பு மருத்துவ அலுவலா் இன்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.