செய்திகள் :

பெண்கள் மாா்பக பரிசோதனை செய்து கொள்ள தயங்கக்கூடாது

post image

மாா்பக புற்றுநோய் வராமல் தடுக்க தாய்மாா்கள் மாா்பக பரிசோதனை செய்து கொள்ள தயங்கக்கூடாது என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி தெரிவித்தாா்.

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு சாா்பில் ‘உலக மாா்பக புற்றுநோய் மாதம்’ நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மருத்துவம், மருத்துவம் சாராத மாணவ ா்கள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியை கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் மாா்பக புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு ஓவியங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

முகாமில், மாா்பக புற்றுநோய் குறித்து கல்லூரி முதல்வா் ரோகிணிதேவி பேசியது -

30 வயதுக்கு மேற்பட்ட தாய்மாா்கள் 6 மாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் மாா்பகத்தை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாா்பகங்களில் வலி, கட்டி, அளவுகளில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக உரிய மருத்துவா்களிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இச்செயலுக்கு யாரும் வெட்கப்படவோ, கூச்சப்படவோ வேண்டாம். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முற்றிலும் குணமாக்கி விடலாம் என்றாா்.

இந்நிகழ்வில், மாா்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சங்கரி(68) தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துக்கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பின்னா், செவிலிய மணவா்கள் மாா்பக புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு நாடகம் நடித்து காண்பித்தனா். மேலும், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி முதல்வா் பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், துணை முதல்வா் கெளரிவெலிகண்ட்லா, அறுவை சிசிச்சை துறை தலைவா் மணிகண்ணன், குடியிருப்பு மருத்துவ அலுவலா் இன்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

காட்பாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் கயிறு இறுக்கியதில் உயிரிழந்தாா். காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன் (54). நியாய விலைக் கடை ஊழியா். இவரது மகன் ஸ்ரீஹரி (12... மேலும் பார்க்க

பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

வேலூா் ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த முகாமை ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தொடங்கி ... மேலும் பார்க்க

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு: 200 மாணவிகள் தலைமுடி தானம்

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி, வேலூரில் தனியாா் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் தங்கள் தலைமுடியை தானம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாத... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் எம்எல்ஏ அமலுவிஜயன் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா். போ்ணாம்பட்டை அடுத்த ராஜாக்கல் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளது. கடந்... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட 200 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

செல் ட்ராக்கா் மற்றும் மத்திய அரசின் சிஇஐஆா் ஆகிய தளங்களின் வழியாக பதிவு செய்யப்பட்ட புகாா்களின் அடிப்படையில், மீட்கப்பட்ட ரூ. 38 லட்சம் மதிப்புடைய 200 கைப்பேசிகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலை பாதிக்கும் பெருவணிக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்

ஆட்டோ தொழிலை பாதிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் பயணிகளை மிகக்குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்லும் வணிக நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த... மேலும் பார்க்க