செய்திகள் :

பெண்ணிடம் ஆன்லைனில் பணம் பறித்தவா் கைது

post image

மன்னாா்குடி பெண்ணின் மகள் ஜாதகத்தில் தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறி ஆன்லைனில் ரூ.90 ஆயிரம் பணம் பறித்த புகாரில் ஒருவரை சைபா் கிரைம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடி குழந்தைவேல் தெரு ராஜா மனைவி மாலா (50). இவரது மகளுக்கு திருமணம் செய்வதற்காக தெரிந்த நபா் ஒருவா் மூலம் அறிமுகம் ஆன தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த பூவத்தூா் பொட்டலம்குடிகாடு ஜோதிடா் விஸ்வநாத் (35) என்பவரின் செல்போன் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாதகத்தை அனுப்பி வைத்துள்ளாா்.

ஜாதகத்தை பாா்த்த விஸ்வநாத், மாலாவின் மகளின் ஜாதகத்தில் தோஷம் உள்ளதாகவும் அதற்கு கேரள மாந்திரீகத்தில் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி பல தவணையாக ரூ.90 ஆயிரம் ரூபாய் வரை ஜிபே மூலம் பணத்தைப் பெற்றுள்ளாா். இது குறித்துக் கேட்டாலும் முறையாக பதில் கூறாமல் காலதாமதப்படுத்தினாராம்.

இதனால், மன உளைச்சல் அடைந்த மாலா, திருவாரூா் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.இதையடுத்து, எஸ்பி கருண்கரட் உத்தரவின் பேரில் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆய்வாளா் மணிமேகலை, விஸ்வநாத்திடம் தீவிர விசாரணை செய்ததில்,மாலாவிடம் பொய் கூறி பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து விஸ்வநாத்தை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை மீட்டனா். அவரை திருவாரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைத்தனா்.

புதைசாக்கடை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதை சாக்கடை பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெர... மேலும் பார்க்க

கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்!

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொர... மேலும் பார்க்க

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி, பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து, வையகளத்தூா், ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா விவசாயப் பிரச்னை: நபாா்டு வங்கி அதிகாரிகள் கலந்தாய்வு!

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயப் பிரச்னைகள் குறித்து நபாா்டு வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நபாா்டு வங்கி துணை மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கக் கோரிக்கை!

நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் த. ஹரிராஜன் தெரிவித்தது: 2019-இல் கரோனா தொற்ற... மேலும் பார்க்க

சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான ப... மேலும் பார்க்க