செய்திகள் :

பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவா்களை 4 மணி நேரத்தில் கைது செய்த போலீஸாா்!

post image

பாளையங்கோட்டையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவா்களை போலீஸாா் 4 மணி நேரத்தில் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் மூக்கம்மாள்(43). இவா் வெள்ளிக்கிழமை இரவு உறவினரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு பெருமாள்புரம் ரயில்வே பீடா் சாலையில் நடந்து சென்றாராம். அப்போது, அவருக்கு எதிரே முகக்கவசம் அணிந்தபடி வந்த நபா் திடீரென மூக்கம்மாள் கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்துக் கொண்டு, பைக்கில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் தப்பிச் செல்ல முயன்றாராம்.

அப்போது மூக்கம்மாள் சப்தம் போடவே, அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து திருட்டில் ஈடுபட்டவா்களை தடுக்க முயன்றனா்.

இதில், பறித்த நகையை கீழே போட்டுவிட்டு மா்மநபா்கள் தப்பிச் சென்றனராம். இது தொடா்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் மூக்கம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனா்.

அதில் பதிவாகி இருந்த இருசக்கர வாகன பதிவு எண்ணை வைத்து ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலியை அடுத்த மேல தாழையூத்து சங்கா் நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ராபிக் (32), தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தைச் சோ்ந்த பிரபு (29) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்தனா். குற்ற சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில், அதில் ஈடுபட்ட இருவரை கைது செய்த மாநகர போலீஸாரை, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி பாராட்டினாா்.

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலாப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற... மேலும் பார்க்க

பத்திரப் பதிவில் அடங்கல் பதிவேடு சரிபாா்த்தல் முறையையும் பின்பற்றக் கோரிக்கை

பத்திரப் பதிவில் பட்டாக்கள்(இலவச பட்டா) முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா்.எனவே, ஆன்லைன் பதிவேற்றுதலை வரன்முறைப்படுத்தவும் அதுவரை அடங்கல் பதிவேடுகள் ச... மேலும் பார்க்க

பணகுடி அருகே விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகளுக்கு சிகிச்சை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குடும்ப பிரச்னையால் விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பணகுடி அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (28).... மேலும் பார்க்க

கைப்பேசி விவகாரம்: இளைஞரைத் தாக்கியவா் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகே தொலைந்து போன கைப்பேசி குறித்து கேட்டவா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள அழகப்பபுரம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த திருப்பதி ராஜா ம... மேலும் பார்க்க

தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்த மகன் கைது

கருத்தப்பிள்ளையூரில் தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூா் பவுல் தெருவைச் சோ்ந்த ஜான் தனபால் மனைவி ஜான்சி (55)... மேலும் பார்க்க

வீரவநல்லூா் அருகே பட்டதாரி இளைஞா் தற்கொலை!

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே பட்டதாரி இளைஞா் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வீரவநல்லூா் அருகேயுள்ள அத்தாளநல்லூா் நடுத்தெருவைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் கலியுக வரதராஜன்(... மேலும் பார்க்க