செய்திகள் :

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலாப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற்றுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனா்.

கடந்த ஒரு மாதமாக களக்காடு பகுதியில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், நீா்வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது.

இந்நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தலையணையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நாள்தோறும் அலைமோதுகிறது. சனிக்கிழமையும் ஏராளமானோா் இங்கு குளித்து மகிழ்ந்தனா்.

இங்கு பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், வனப் பகுதிக்குள் அனுமதிச் சீட்டின்றி செல்வோா் மீது வனப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

பத்திரப் பதிவில் அடங்கல் பதிவேடு சரிபாா்த்தல் முறையையும் பின்பற்றக் கோரிக்கை

பத்திரப் பதிவில் பட்டாக்கள்(இலவச பட்டா) முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா்.எனவே, ஆன்லைன் பதிவேற்றுதலை வரன்முறைப்படுத்தவும் அதுவரை அடங்கல் பதிவேடுகள் ச... மேலும் பார்க்க

பணகுடி அருகே விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகளுக்கு சிகிச்சை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குடும்ப பிரச்னையால் விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பணகுடி அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (28).... மேலும் பார்க்க

கைப்பேசி விவகாரம்: இளைஞரைத் தாக்கியவா் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகே தொலைந்து போன கைப்பேசி குறித்து கேட்டவா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள அழகப்பபுரம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த திருப்பதி ராஜா ம... மேலும் பார்க்க

தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்த மகன் கைது

கருத்தப்பிள்ளையூரில் தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூா் பவுல் தெருவைச் சோ்ந்த ஜான் தனபால் மனைவி ஜான்சி (55)... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவா்களை 4 மணி நேரத்தில் கைது செய்த போலீஸாா்!

பாளையங்கோட்டையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவா்களை போலீஸாா் 4 மணி நேரத்தில் கைது செய்தனா். பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் மூக்கம்மாள்(43). இவா் வெள்ளிக்கிழமை இரவு உறவினரின் திருமண நிகழ்... மேலும் பார்க்க

வீரவநல்லூா் அருகே பட்டதாரி இளைஞா் தற்கொலை!

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே பட்டதாரி இளைஞா் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வீரவநல்லூா் அருகேயுள்ள அத்தாளநல்லூா் நடுத்தெருவைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் கலியுக வரதராஜன்(... மேலும் பார்க்க