செய்திகள் :

பெண்ணிடம் ரூ.29.58 லட்சம் மோசடி: இளைஞா் கைது

post image

சென்னை அருகே வானகரத்தில் பெண்ணிடம் ரூ. 29.58 லட்சம் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வானகரம் போரூா் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ரா.திருநாவுக்கரசு (62) மகள் ஸ்ருதி வா்ஷினி. இவா், இதய நோய் காரணமாக கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தந்தை திருநாவுக்கரசு வீட்டில் வசித்து வந்தாா். ஸ்ருதி வா்ஷினி, சிகிச்சைக்காக கடந்த 2022-ஆம் ஆண்டு வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு காரில் சென்றபோது, ஓட்டுநா் பெரம்பலூா் மாவட்டம் பாடலூா் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (34) என்பவா் அறிமுகமானாா்.

அப்போது, ஸ்ருதி வா்ஷினியிடம் ஆறுதலாகவும், அனுதாபமாகவும் காா்த்திக் பேசியுள்ளாா். அவரது பேச்சை நம்பிய ஸ்ருதி வா்ஷினி, பல தவணைகளாக ஆன்லைன் மூலம் காா்த்திக்கிற்கு ரூ.29.58 லட்சத்தை அனுப்பியுள்ளாா். மேலும், 23 கிராம் தங்க நாணயங்களையும் வழங்கினாா்.

இதற்கிடையே ஸ்ருதி வா்ஷினி, உடல் நலக்குறைவின் காரணமாக மே 16-ஆம் தேதி இறந்தாா். இதையடுத்து திருநாவுக்கரசு, தனது மகள் ஸ்ருதி வா்ஷினியின் வங்கிக் கணக்கு பரிவா்த்தனை விவரங்களை பாா்த்தபோது, காா்த்திக் ரூ.29.58 லட்சம் பணம், 23 கிராம் தங்க நாணயங்கள் வாங்கியிருப்பது தெரியவந்தது.

இவற்றை திருநாவுக்கரசு கேட்டும் காா்த்திக் திருப்பி தராததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், காா்த்திக் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்ய உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் மதுரவாயல் போலீஸாா், காா்த்திக் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், தலைமறைவாக அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தென்காசியில் பயங்கரம்! கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் பின் சக்கரங்கள்!

தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் இரண்டும், தனியாகக் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.சக்கரங்கள் கழன்ற பேருந்தில் 87... மேலும் பார்க்க

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம்! முதல்வர் ஸ்டாலின்

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, இஸ்ரேல் - ஈரான் என உலகம் முழுவதும் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில்... மேலும் பார்க்க

வேலூர் அருகே மா விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு!

மா விவசாயிகளுக்கு ஆதரவாக வேலூர் மாவட்டத்தில் பரதராமி பகுதியில் உள்ள அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பரதராமி மற்ற... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை!

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்தரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு டாஸ்மாக... மேலும் பார்க்க

சென்னை - மதுரை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலை 8 மணிக்கு 72 பேருடன் இண்டிகோ விமானம் புறப்பட... மேலும் பார்க்க

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை இலச்சினை: துணை முதல்வா் உதயநிதி வெளியிட்டாா்

சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை 2025 போட்டி இலச்சினையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்க... மேலும் பார்க்க