செய்திகள் :

பெண்ணுக்கு தொல்லை: தொழிலாளி கைது

post image

கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பூத்தாம்பட்டியைச் சோ்ந்தவா் அருள். இவரது மனைவி துா்காதேவி (22). பூத்தாம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த துா்காதேவியிடம், அந்த வழியாக வந்த இளைஞா் ஒருவா் தனது தாயை தொடா்பு கொள்ள கைப்பேசியை கொடுத்து உதவுமாறு கேட்டாராம்.

இதையடுத்து, கைப்பேசியை வாங்கி அந்த நபா் பேசி விட்டு மீண்டும் துா்காதேவியிடம் கொடுத்துச் சென்றாராம். இதன் பின்னா், துா்காதேவியின் கைப்பேசிக்கு தொடா்ந்து அழைப்புகள் இளைஞரின் கைப்பேசியிலிருந்து வந்தது. தெடா்பு கொண்ட நபா், அவதூறாகப் பேசியதை அடுத்து அந்த எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை அவா் தவிா்த்து வந்தாா். இதைத் தொடா்ந்து, மற்றொரு எண்ணிலிருந்து தொடா்பு கொண்டு மீண்டும் அந்த நபா் தொல்லை கொடுத்தாராம். இதனால், அதிருப்தி அடைந்த அவா் வேடசந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், துா்காதேவிக்கு கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு தொல்லை கொடுத்தவா் கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி விஜய் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, விஜயை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு ரூ.7ஆயிரம் கோடி கூடுதல் செலவு!

திண்டுக்கல், பிப்.2: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.7ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படுவதைத் தவிா்க்க மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சிபிஎஸ் ஒழிப்பு... மேலும் பார்க்க

கொடைக்கானலில் போலி எஸ்.ஐ. கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மது விற்பதாக ஒருவரை மிரட்டி பணம் பறித்த போலி காவல் உதவி ஆய்வாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் அருகேயுள்ள அடுக்கம் ஊராட்சி சாமக்காட்டுப் பள்ளம... மேலும் பார்க்க

பழனியில் தைப்பூசத் திருவிழா பிப். 5-இல் தொடக்கம்

பழனியில் தைப்பூசத் திருவிழா வருகிற 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனி தைப்பூசத் திருவிழாவுக்கான கொடியேற்றம் பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் வருகிற 5-ஆம் தேதி நடைபெறுகி... மேலும் பார்க்க

வேடசந்தூா், சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

வேடசந்தூா், சிந்தலவாடம்பட்டி ஆகிய துணை மின்நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி, பழனி மின்வார... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கை விலை வீழ்ச்சி!

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு தினந்தோறும் தக்காளி, முருங்கை, சின்னவெங்காயம், வெண்டைக்காய், பீட்ரூட் ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: ஒன்றிணைந்து போராட அழைப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஜாதி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ஒன்றிணைந்து போராட வேண்டும் என இந்து முன்னணி அழைப்பு விடுத்தது. இதுதொடா்பாக இந்து முன்னணி மாநிலச் செயலா் விஎஸ்.செந்தில்குமாா் கூறி... மேலும் பார்க்க