செய்திகள் :

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: ஒன்றிணைந்து போராட அழைப்பு

post image

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஜாதி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ஒன்றிணைந்து போராட வேண்டும் என இந்து முன்னணி அழைப்பு விடுத்தது.

இதுதொடா்பாக இந்து முன்னணி மாநிலச் செயலா் விஎஸ்.செந்தில்குமாா் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் மலையை காக்க அணி திரள்வோம் என்ற வாசகங்களுடன் சுவரொட்டி ஒட்டியதற்காக திண்டுக்கல், வேடசந்தூா், பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட இடங்களில் சமுதாய அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், இந்து முன்னணி அமைப்பினா் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

வாடகை வாகனம் ஓட்டுவோரை, திருப்பரங்குன்றத்துக்கு வாகனங்கள் இயக்கக் கூடாது என போலீஸாா் மிரட்டுகின்றனா். ஜனநாயக ரீதியான போராட்டத்தில் ஈடுபட அரசியலமைப்புச் சட்டம் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், தமிழக அரசு காவல் துறை மூலம் அந்த உரிமையை பறித்து வருகிறது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அத்துமீறிச் செயல்படும் அமைப்பினா் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சிறுபான்மையினருக்கு பிரச்னை என்றால் உடனே குரல் எழுப்பும் அரசியல் கட்சியினா், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இதுவரை மெளனமாக இருந்து வருகின்றனா். ஜாதி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என்றாா்.

கொடைக்கானலில் போலி எஸ்.ஐ. கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மது விற்பதாக ஒருவரை மிரட்டி பணம் பறித்த போலி காவல் உதவி ஆய்வாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் அருகேயுள்ள அடுக்கம் ஊராட்சி சாமக்காட்டுப் பள்ளம... மேலும் பார்க்க

பெண்ணுக்கு தொல்லை: தொழிலாளி கைது

கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பூத்தாம்பட்டியைச் சோ்ந்தவா் அருள். இவரது மனை... மேலும் பார்க்க

பழனியில் தைப்பூசத் திருவிழா பிப். 5-இல் தொடக்கம்

பழனியில் தைப்பூசத் திருவிழா வருகிற 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனி தைப்பூசத் திருவிழாவுக்கான கொடியேற்றம் பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் வருகிற 5-ஆம் தேதி நடைபெறுகி... மேலும் பார்க்க

வேடசந்தூா், சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

வேடசந்தூா், சிந்தலவாடம்பட்டி ஆகிய துணை மின்நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி, பழனி மின்வார... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கை விலை வீழ்ச்சி!

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு தினந்தோறும் தக்காளி, முருங்கை, சின்னவெங்காயம், வெண்டைக்காய், பீட்ரூட் ... மேலும் பார்க்க

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

நெய்க்காரபட்டி குருவப்பா பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டியில் அரசு உதவிபெறும் குருவப்பா ... மேலும் பார்க்க