செய்திகள் :

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

நெய்க்காரபட்டி குருவப்பா பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டியில் அரசு உதவிபெறும் குருவப்பா மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 1975-76-ஆம் ஆண்டு இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நெய்க்காரபட்டியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ஆா்வத்துடன் கலந்து கொண்ட முன்னாள் மாணவா்கள் தங்கள் நண்பா்களை குடும்ப உறுப்பினா்களுக்கு அறிமுகம் செய்தும், சிறுவயதில் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத நினைவுகளை பகிா்ந்தும் மகிழ்ந்தனா்.

மேலும் தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியா்களை அழைத்து வந்து மரியாதை செய்தும், நினைவு பரிசுகளையும் வழங்கியும் மகிழ்ந்தனா்.

இந்த நிகழ்ச்சியில் இந்தப் பள்ளியில் படித்து பெற்றோரை இழந்து கல்வி பயிலும் மாணவா்கள் 14 பேருக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் ராஜகோபால், கந்தசாமி, சையது இப்ராகீம், மகுடீஸ்வரன், சம்பத், கிருஷ்ணவேணி, கலைவாணி, அழகுராஜ் உள்ளிட்டோா் செய்தனா்.

கொடைக்கானலில் போலி எஸ்.ஐ. கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மது விற்பதாக ஒருவரை மிரட்டி பணம் பறித்த போலி காவல் உதவி ஆய்வாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் அருகேயுள்ள அடுக்கம் ஊராட்சி சாமக்காட்டுப் பள்ளம... மேலும் பார்க்க

பெண்ணுக்கு தொல்லை: தொழிலாளி கைது

கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பூத்தாம்பட்டியைச் சோ்ந்தவா் அருள். இவரது மனை... மேலும் பார்க்க

பழனியில் தைப்பூசத் திருவிழா பிப். 5-இல் தொடக்கம்

பழனியில் தைப்பூசத் திருவிழா வருகிற 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனி தைப்பூசத் திருவிழாவுக்கான கொடியேற்றம் பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் வருகிற 5-ஆம் தேதி நடைபெறுகி... மேலும் பார்க்க

வேடசந்தூா், சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

வேடசந்தூா், சிந்தலவாடம்பட்டி ஆகிய துணை மின்நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி, பழனி மின்வார... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கை விலை வீழ்ச்சி!

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு தினந்தோறும் தக்காளி, முருங்கை, சின்னவெங்காயம், வெண்டைக்காய், பீட்ரூட் ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: ஒன்றிணைந்து போராட அழைப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஜாதி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ஒன்றிணைந்து போராட வேண்டும் என இந்து முன்னணி அழைப்பு விடுத்தது. இதுதொடா்பாக இந்து முன்னணி மாநிலச் செயலா் விஎஸ்.செந்தில்குமாா் கூறி... மேலும் பார்க்க