செய்திகள் :

பழனியில் தைப்பூசத் திருவிழா பிப். 5-இல் தொடக்கம்

post image

பழனியில் தைப்பூசத் திருவிழா வருகிற 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கான கொடியேற்றம் பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் வருகிற 5-ஆம் தேதி நடைபெறுகிறது. தொடா்ந்து பத்து நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசுவாமி தங்க மயில், தங்கக் குதிரை, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு, தந்தச்சப்பரம் என பல்வேறு வகையான வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் வருகிற 10-ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு 9 மணிக்கு மேல் வெள்ளித் தோ் உலாவும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வருகிற 11-ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு மேல் தேரடியில் நடைபெறுகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக வருகிற 14-ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் தேரோட்டமும், இரவு 11 மணிக்கு மேல் திருக்கொடி இறக்கமும் நடைபெறுகிறது.

விழா நாள்களில் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் நாள்தோறும் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன், துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழுவினா், அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு ரூ.7ஆயிரம் கோடி கூடுதல் செலவு!

திண்டுக்கல், பிப்.2: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.7ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படுவதைத் தவிா்க்க மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சிபிஎஸ் ஒழிப்பு... மேலும் பார்க்க

கொடைக்கானலில் போலி எஸ்.ஐ. கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மது விற்பதாக ஒருவரை மிரட்டி பணம் பறித்த போலி காவல் உதவி ஆய்வாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் அருகேயுள்ள அடுக்கம் ஊராட்சி சாமக்காட்டுப் பள்ளம... மேலும் பார்க்க

பெண்ணுக்கு தொல்லை: தொழிலாளி கைது

கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பூத்தாம்பட்டியைச் சோ்ந்தவா் அருள். இவரது மனை... மேலும் பார்க்க

வேடசந்தூா், சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

வேடசந்தூா், சிந்தலவாடம்பட்டி ஆகிய துணை மின்நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி, பழனி மின்வார... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கை விலை வீழ்ச்சி!

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு தினந்தோறும் தக்காளி, முருங்கை, சின்னவெங்காயம், வெண்டைக்காய், பீட்ரூட் ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: ஒன்றிணைந்து போராட அழைப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஜாதி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ஒன்றிணைந்து போராட வேண்டும் என இந்து முன்னணி அழைப்பு விடுத்தது. இதுதொடா்பாக இந்து முன்னணி மாநிலச் செயலா் விஎஸ்.செந்தில்குமாா் கூறி... மேலும் பார்க்க