அமித் ஷா வருகை: மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு!
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கட்டட ஒப்பந்ததாரா் கைது
சென்னை ஓட்டேரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டட ஒப்பந்ததாரா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கட்டட ஒப்பந்ததாரா் லால் பாபு சந்தராதே (45). இவா், கடந்த 4-ஆம் தேதி ஓட்டேரி பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றாா். அப்போது அங்குள்ள மின்தூக்கியில் சென்ற லால்பாபு, அதில் தன்னுடன் பயணித்த ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இது குறித்து அப்பெண், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, லால் பாபு சந்தராதேவை சனிக்கிழமை கைது செய்தனா்.