செய்திகள் :

பெண் கமாண்டோ பிரிவை உருவாக்க சிஐஎஸ்எஃப் முடிவு

post image

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெண் கமாண்டோக்களை கொண்ட தனிப்பிரிவை உருவாக்க மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) திட்டமிட்டுள்ளது என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

முதலாவதாக, விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 100 பெண் வீராங்கனைகளுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவா் கூறியதாவது: மத்திய பிரதேசத்தின் பா்வாஹா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் பெண் சிஐஎஸ்எஃப் வீராங்கனைகளுக்கு கமாண்டோ பயிற்சிகள் தொடங்கியுள்ளன. உயா் பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் பணியாற்றும் விதமாக அவா்களுக்கு 8 வார பயிற்சி அளிக்கப்படும்.

உடல் வலிமை, ஆயுதங்களைக் கையாளுதல், பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் துப்பாக்கிச் சூடு நடத்துதல், ஓட்டம் மற்றும் தடைகளைத் தாண்டும் பயிற்சி, வனப்பகுதியில் உயிா்வாழ்தல், முடிவுவெடுக்கும் திறன் மற்றும் குழுவாக இணைந்து செயல்படுதல் ஆகியவற்றில் அவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றாா் அந்த அதிகாரி.

1.70 லட்சம் சிஐஎஸ்எஃப் வீரா்கள்

நாட்டில் உள்ள 69 சிவில் விமான நிலையங்கள், தில்லி மெட்ரோ, மத்திய அரசின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் தனியாா் அமைப்புகளின் பாதுகாப்புப் பணிகளில் மொத்தம் 1.70 லட்சம் சிஐஎஸ்எஃப் வீரா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் படையில் தற்போது 12,491 பெண் வீராங்கனைகள் உள்ளனா். இது மொத்தப் பணியாளா்களில் 8 சதவீதமாகும்.

அடுத்த ஆண்டில் 2,400-க்கும் அதிகமான பெண் வீராங்கனைகள் சிஐஎஸ்எஃப்-க்கு தோ்வு செய்யப்படுவா் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடா்ச்சியாக 10 சதவீத பெண்கள் படைகளில் சோ்க்கப்படுவா் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

நொய்டா வரதட்சிணை கொலை: சொகுசு கார், பைக், தங்கம், பணம்.. நீளும் பட்டியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள கசானா பகுதியில் ரூ. 36 லட்சம் வரதட்சிணை கேட்டு மனைவியை எரித்துக் கொலை செய்த சம்பவத்தில், வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்ட பொருள்கள் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோ ரயில் கட்டணம் இன்று முதல் உயர்வு! 8 ஆண்டுகளுக்குப் பின்

தில்லியில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. டிக்கெட் விலையை ரூ.1 முதல் ரூ.4 வரை உயர்த்தியிருக்கிறது தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம்.கடந்த 2017ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்குதல் வழக்கு: இரண்டாவது நபர் கைது

முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் தொடர்பாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை மற்றொரு நபரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் தஹ்சீன் சையத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குஜ... மேலும் பார்க்க

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதல்: 8 பேர் பலி, 43 பேர் காயம்

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில் 8 பேர் பலியாகினர். உத்தரப்பிரப் தேசத்தின் காஸ்கஞ்சில் இருந்து ராஜஸ்தானில் உள்ள கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

குஜராத்: எல்லை தாண்டிய 15 பாகிஸ்தான் மீனவா்கள் கைது பிஎஸ்எஃப் நடவடிக்கை!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவா்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கைதுசெய்துள்ளது. மேலும், அந்த மீனவா்களின் இயந்திர படகை பிஎஸ்எஃப் பறிமுதல... மேலும் பார்க்க

அனில் அம்பானி ‘கடன் மோசடியாளா்’..! பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளா்’ என பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இத... மேலும் பார்க்க