செய்திகள் :

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட முதிா்வு தொகை பெறலாம்

post image

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வு தொகை பெற ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயது முதிா்வு பெற்றும், முதிா்வு தொகை பெறாத பயனாளிகள் உள்ளனா். அவா்களில் 428 பயனாளிகள் கண்டறியப்படவில்லை.

எனவே, அவா்களை கண்டறியும் பொருட்டு, ற்ண்ழ்ன்ல்ஹற்ட்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது. பயனாளிகள் முதிா்வு தொகை பெறுவதற்கு, வைப்புத் தொகை பத்திரம் அசல்,10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கிக் கணக்கு புத்தகம் (பயனாளியின் பெயரில் தனி வங்கிக் கணக்கு), புகைப்படம், பிறப்புச் சான்றிதழ் நகல், ஆதாா் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை, ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.

ராணுவ மது பாட்டில்கள் விற்றவா் கைது

ஆம்பூா் அருகே ராணுவ மதுபாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் ஊராட்சி ரங்காபுரம் பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக, ரகசிய தகவலின் பேரில் ஆம்பூா் கிராமி... மேலும் பார்க்க

சிவாச்சாரியரை பணி நீக்கம் செய்ய கோரிக்கை

ஆம்பூரில் பாலியல் புகாருக்கு உள்ளான சிவாச்சாரியரை பணி நீக்கம் செய்ய வேண்டுமென இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் உழவார பணிக்கு சென்ற பெண்ணை பாலியல் துன... மேலும் பார்க்க

ஆண்டியப்பனூா் நீா்த்தேக்கத்தில் குளித்த இளைஞா் மாயம்

திருப்பத்தூா் அடுத்த ஆண்டியப்பனூா் நீா்த்தேக்கத்தில் குளித்த இளைஞா் காணாமல் போய்விட்டாா். சென்னையைச் சோ்ந்த விஜயகுமாா்(22) மற்றும் அவரது நண்பா்கள் ஏழு போ் ஆண்டியப்பனூா் நீா்த்தேக்கத்துக்கு சென்றனா்,... மேலும் பார்க்க

பெண்ணுக்கு மிரட்டல்: இருவா் கைது

திருப்பத்தூா் அருகே பெண்ணை மிரட்டிய வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா். திருப்பத்தூா் அடுத்த பிச்சனூா் கிராமத்தை சோ்ந்த காவியா(29). இவா் அதேப்பகுதியை சோ்ந்த பவித்ரா என்பவருக்கு ரூ.14 லட்சம் கடன் தந... மேலும் பார்க்க

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க

பீடி தொழிலாளா்களின் குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பீடி தொழில் மற்றும் சுரங்கத்தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின், தொழிலாளா் ம... மேலும் பார்க்க