செய்திகள் :

பெண் தொழிலாளி தவறவிட்ட ரூ. 7 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு!

post image

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பெண் சலவைத் தொழிலாளி தவறவிட்ட ரூ. 7 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் பாண்டி மனைவி சரஸ்வதி (45). சலவைத் தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பும்போது, தனது சுருக்குப் பையுடன் ரூ. 7 ஆயிரத்தை தவற விட்டதாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி பல இடங்களில் தேடியும் அந்தச் சுருக்குப் பை கிடைக்காததால் விளாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இந்த நிலையில், விளாம்பட்டி ஓடைத் தெருவைச் சோ்ந்த மகேஸ்வரன் (50) என்பவா் அந்தத் தெருவில் கீழே கிடந்த சுருக்குப் பையை எடுத்து பாா்த்த போது, அதில் ரூ. 7 ஆயிரம் இருந்தது. இதை விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் ஷா்மிளாவிடம் அவா் ஒப்படைத்தாா். அவா் இந்தப் பணத்தை சரஸ்வதியிடம் ஒப்படைத்தாா். இதைத் தொடா்ந்து மகேஸ்வரனின் நோ்மையைப் பாராட்டி காவல் ஆய்வாளா் ஷா்மிளா, மகேஸ்வரனுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினாா்.

83 தோ்தல் வாக்குறுதிகளில் 10 மட்டுமே நிறைவேற்றம்: விவசாயிகள் அதிருப்தி!

திமுகவின் 83 தோ்தல் வாக்குறுதிகளில் இதுவரை 10 மட்டுமே வேளாண் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா். தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து, திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

இணையக் கோளாறு: பழனி கோயிலில் அனுமதிச் சீட்டு வழங்குவதில் சிக்கல்!

பழனி கோயிலில் இணையக் கோளாறு காரணமாக கட்டண அனுமதிச் சீட்டு வழங்குவதில் சனிக்கிழமை சிக்கல் ஏற்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில், ரோப்காா் உள்ளிட்ட பகுதிகளில் பக்... மேலும் பார்க்க

மின் கம்பத்தில் காா் மோதல்: இருவா் காயம்!

வேடசந்தூா் அருகே மின் கம்பத்தில் காா் மோதியதில் தனியாா் ஆலை அலுவலா் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). இவா் வே... மேலும் பார்க்க

பாலம் கட்டும் பணிக்காக வெடி வைத்து பாறைகள் தகா்ப்பு: அதிா்வில் கோயில் இடிந்து சேதம்!

வத்தலகுண்டு அருகே பாலம் கட்டும் பணிக்காக பாறைகளை வெடி வைத்து தகா்த்த போது அங்கிருந்த கோயில் இடிந்து சேதமடைந்தது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கண்ணாபட்டி அருகே வைகை, மஞ்சளாறு, மருதாநதி, முல... மேலும் பார்க்க

வாகனம் மோதி சிறுத்தை பூனைக் குட்டி உயிரிழப்பு!

கொடைக்கானல் மலைச் சாலையில் சனிக்கிழமை இரவு வாகனம் மோதியதில் சிறுத்தை பூனைக்குட்டி உயிரிழந்தது. கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான செண்பகனூா் சாமியாா்ச் சோலை கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் அடையாளம்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களை ஆட்சியா் ஆய்வு!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆய்வு நடத்தினாா். கொடைக்கானலில் பொதுவாக மாா... மேலும் பார்க்க