கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களை ஆட்சியா் ஆய்வு!
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
கொடைக்கானலில் பொதுவாக மாா்ச் 15 முதல் சீசன் காலம் தொடங்கி ஜூன் 15 வரை நீடிக்கும். இந்தக் காலங்களில் தரைப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்பதால் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருவது வழக்கம். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். இந்த நிலையில, வரும் கோடை சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ப வசதிகள் செய்து கொடுப்பது தொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப் உள்ளிட்ட அதிகாரிகள் கொடைக்கானலுக்கு வந்தனா்.
கொடைக்கானல் பேருந்து நிலையம், கோக்கா்ஸ்வாக், பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களை அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா். இதைத் தொடா்ந்து கொடைக்கானல் நகா்மன்ற அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு, மாவட்ட ஆட்சியா் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப், கொடைக்கானல் நகா் மன்றத் தலைவா் செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா் மன்றத் துணைத் தலைவா் மாயக் கண்ணன் வரவேற்றாா்.
கூட்டத்தில் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், உணவகங்கள்,விடுதிகளில் தங்குபவா்களுக்கான பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. இதில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு, வட்டாட்சியா் பாபு, டி.எஸ்.பி. மதுமதி, நகராட்சி ஆணைா் சத்தியநாதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கொடைக்கானல் கிளை மேலாளா் ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ராஜா, உதவி சுற்றுலாத் துறை அலுவலா் சுதா உள்ளிட்ட பல்வேறுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், கொடைக்கானல் ஹோட்டல்ஸ்,ரிசாா்ட்ஸ் சங்கத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சரவணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்த தேவையான இடங்கள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. நகா்ப் பகுதி, வனப் பகுதி, புகா்ப் பகுதியென பல இடங்களை பாா்வையிட்டோம்.
இது தொடா்பாக அந்தந்தத் துறை அதிகாரிகளின் ஆலோசனையும் பெறப்பட்டது. சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தேவைப்பட்டால் பெருமாள்மலையிலிருந்து ஏரிச்சாலை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, சாலைகளை அகலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெறும். கோடை விழாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சிகளுடன் புதிய நிகழ்ச்சிகளும் இடம்பெறும் என்றாா் அவா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சீசன் காலங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கொடைக்கானலிலுள்ள காவலா்கள் மட்டுமன்றி வெளியூா்களைச் சோ்ந்த 100 காவலா்கள் தினமும் பணியில் ஈடுபடுத்தப்படுவா். இவா்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா். அனைத்து சுற்றுலா இடங்களிலும் காவலா்கள் ரோந்து வாகனங்களில் கண்காணிப்பாா்கள் என்றாா் அவா்.