செய்திகள் :

பெண் நோயாளிகளின் சிகிச்சை விடியோக்களை வெளியிட்ட கும்பல்: மூவர் கைது!

post image

மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளிகளின் விடியோக்களை வெளியிட்ட விவகாரத்தில் மூன்று பேரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் ராஜ்கோட்டில் உள்ள பாயல் மகப்பேறு இல்லம் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் பெண்களின் விடியோக்கள் சட்டவிரோதமாக டெலிகிராம் செயலி சேனலில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

அதில் ஒரு காணொளியில் ஒரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது டெலிகிராமில் வைரலானது. இதில், ஒரு குழுவில் இதுபோன்ற காணொளிகள் சந்தா பெற்று விற்கப்படுவது கண்டறியப்பட்டது.

இதையும் படிக்க | தாய் மரணம்.. 4 வயது மகள் வரைந்த ஓவியத்தைப் பார்த்து அதிர்ந்த போலீஸ்

இதுபோன்ற காணொளிகள் முறையின்றி பரவுவது நோயாளிகளின் தனியுரிமையை நேரடியாக மீறுவதாகும். இந்த நிலையில், அகமதாபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் மருத்துவமனையின் சிசிடிவி கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டதை விசாரணையில் உறுதிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அகமதாபாத் சைபர் கிரைம் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் பல மாநிலங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பிரக்னேஷ் பாட்டீல், பிரஜ்வால் தேலி ஆகியோர் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு நபரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஏழு நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகின்றது. இவர்கள் ஒரு பெரிய அமைப்பாக செயல்பட்டு வந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் 2024 இல் இவற்றைப் பகிர தனியே ஒரு டெலிகிராம் சேனல் உருவாக்கப்பட்டு, ஜனவரி 6 அன்று யூடியூப்பில் ஒரு விடியோ வெளியாகி வைரலானது.

தற்போது யூடியூப் மற்றும் டெலிகிராமில் பரப்பப்பட்ட விடியோக்கள் சைபர் கிரைம் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன என்றும் அவை மேலும் பரவாமல் தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | பாகிஸ்தானில் பஞ்சாப் பயணிகள் சுட்டுக்கொலை! என்ன நடந்தது?

மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை நாடு முழுக்க சிலர் கசிய விடுவதாகவும் குஜராத் உள்பட 2 மாநிலங்களில் இதற்கென சைபர் குற்றவாளிகள் செயல்பட்டு வருவதாகவும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு விமானத்தில் உடைந்த இருக்கை

ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குற்றஞ்சாட்டியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌ... மேலும் பார்க்க

இந்தியாவுக்குள் நுழையும் டெஸ்லா! மற்ற கார்களின் விற்பனை பாதிக்குமா?

எலான் மஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் டெஸ்லா கார்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இறக்குமதி வரி அதிகளவில் இருந்ததால், டெஸ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடப்படும்!

ஹைதராபாத்: தேர்தலை முன்னிட்டு மதுபானக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும் என்று சைபராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 4 மணி முதல் பிப்ரவரி 27 மாலை 4 மணி வரை தெலங்கானா மாநில சட்... மேலும் பார்க்க

கேரளம்: சுங்கத்துறை குடியிருப்பில் ஒரே வீட்டில் மூன்று சடலங்கள்!

கேரள மாநிலம் எர்ணாகும் மாவட்டத்தில் மத்திய சுங்கத் துறை குடியிருப்பில், ஒரு வீட்டிலிருந்து மூன்று உடல்கள் கைப்பற்றப்பட்டு உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க