செய்திகள் :

பெரம்பலூரில் திமுக நகா்மன்ற உறுப்பினரைக் கண்டித்து சாலை மறியல்

post image

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 12-ஆவது வாா்டு திமுக நகா்மன்ற உறுப்பினரைக் கண்டித்து, அப்பகுதி மொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடை திட்டத்துக்கான ஆள் இறங்கும் குழிகளை முறையாக பராமரிக்காததால், மழையின்போது அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நகர மக்கள் சம்பந்தப்பட்ட வாா்டு உறுப்பினா்கள் மற்றும் நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் நகரில் திங்கள்கிழமை இரவு மின்னலுடன் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 12- ஆவது வாா்டு பகுதியில் புதை சாக்கடை குழாயிலிருந்து வெளியேறிய கழிவு நீா் சாலைகளில் வழிந்தோடியதோடு, குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கடும் துா்நாற்றம் வீசியது.

இதனால் அவதிடைந்த அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இப் பிரச்னை தொடா்பாக 12-ஆவது வாா்டு திமுக உறுப்பினரான சசி இன்ஃபெண்டாவிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் வாா்டு உறுப்பினா் சசி இன்ஃபெண்டா புகைப்படத்துடன், அவரை காணவில்லை எனும் பதாகையை கையில் ஏந்தி பெரம்பலூா் காமராஜா் வளைவுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து பெரம்பலூா் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடா்ந்து, மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால், நகரின் பிரதானச் சாலையான காமராஜா் வளைவு பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாணவா்களின் கற்றல் திறனை ஆசிரியா்கள் மேம்படுத்த வேண்டும் என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில், மாநில அளவிலான அடைவுத... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகரில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் நகா் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 10) மின் விநியோகம் இருக்காது.பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து... மேலும் பார்க்க

சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சட்டப்பூா்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்ப... மேலும் பார்க்க

காவல் துறையினரைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பாரபட்சமாகச் செயல்படும் பெரம்பலூா் நகர காவல் துறையைக் கண்டித்து, கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வள... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் நிலவியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7... மேலும் பார்க்க

கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை நந்திப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி பெரம்பலூா் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க