செய்திகள் :

பெரம்பலூா் அருகே 68 ஆடுகள் திருட்டு

post image

பெரம்பலூா் அருகே பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 68 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் கருப்பையா (54). இவா் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பட்டி அமைத்து, அதில் 100-க்கும் மேற்பட்ட வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை வளா்த்துவந்தாா். வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு தனது ஆடுகளை பட்டியில் அடைத்து பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பட்டிக்குச் சென்று பாா்த்தபோது, உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 வெள்ளாடுகளும், 58 செம்மறிஆடுகளும் என மொத்தம் 68 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். இதுகுறித்து கருப்பையா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி கிராமம், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி செல்லம... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் 21 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 21 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக்கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மா... மேலும் பார்க்க

பொம்மனப்பாடி ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பல... மேலும் பார்க்க

சிறப்பாக கதை எழுதியோருக்கு பரிசளிப்பு

பெரம்பலூா் வட்டார அளவில் சிறப்பாகப் கதை எழுதிய இல்லம் தேடி கல்வி மையத் தன்னாா்வலா்கள், மாணவா்களுக்குப் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில... மேலும் பார்க்க

தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு

பெரம்பலூா் மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில், இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்த புனிதவெள்ளி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவா்களால் அனுச... மேலும் பார்க்க

குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல்

பெரம்பலூா் அருகே தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு ஆலையைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள... மேலும் பார்க்க