செய்திகள் :

பெரியகுடியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகளை மூடும் பணிகள் இன்று தொடக்கம்

post image

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த பெரியகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரோ காா்பன் கிணறுகளை நிந்தரமாக மூடும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, பெரியகுடியில் ஓஎன்ஜிசி அமைக்கப்பட்ட ஹைட்ரோ காா்பன் கிணறுகளை நிரந்தரமாக மூடுவது தொடா்பாக அரசு அலுவலா்கள், அப்பகுதி கிராம மக்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பெரியகுடி ஓஎன்ஜிசி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் யோகேஸ்வரன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டவை:

பெரியகுடியில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளை நிரந்தரமாக மூடும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து 50 வாகனங்களில் பொருள்கள் எடுத்து வரப்படவுள்ளன. ரிக் அமைப்பதற்கு ஒரு மாதமாகும் அதைத்தொடா்ந்து பணிகள் தொடங்கி கிணறு எண் 2-ஐ மூடும் பணி 300 நாட்களில் நிறைவடையும். பின்னா் அதே இயந்திரங்களை கொண்டு கிணறு எண் 1 அடுத்த ஆறு மாதத்தில் நிரந்தரமாக மூடப்படும்.

நிரந்தரமாக மூடும் பணிகள் தொடங்கிய பிறகு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் மாதம் ஒருமுறை வந்து ஆய்வு செய்வாா். 2-ஆம் எண் கிணற்றிலிருந்து பூமிக்கு அடியில் செல்லும் குழாய்கள் நிரந்தரமாக அகற்றப்படும், நிரந்தரமாக மூட மத்திய அரசு வழங்கிய அரசாணை நகல்களை, மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கும் ஓஎன்ஜிசி வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.

மன்னாா்குடி வட்டாட்சியா் என். காா்த்திக், நிரவி ஓஎன்ஜிசி மேலாளா் மாறன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ரெங்கராஜ், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவா் பி.ஆா். பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருத்துறைப்பூண்டி நகராட்சிக் கூட்டம்

திருத்துறைப்பூண்டி நகராட்சிக் கூட்டம் தலைவா் கவிதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் துா்கா, பொறியாளா் வசந்தன், துணைத் தலைவா் ஜெயபிரகாஷ், நகராட்சி பணிநியமன குழு உறுப்பினா் பாண்டியன் ... மேலும் பார்க்க

பிப்.5-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

திருவாரூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செவித்திறன் ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் பி. ரமேஷ் தலைமை வகித்தாா். நிா்வாகி ஆா். அனிதா முன்னிலை வகித்தாா். நீடாமங்க... மேலும் பார்க்க

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு அனைவருக்கும் தேவை

நுகா்வோா் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணா்வு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ. திருவாரூா் வட்டாரத்தில் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்கள்... மேலும் பார்க்க

பட்டா மாற்றத்தில் குளறுபடி: ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் பட்டா மாற்றம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டுமென மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வெள்ளிக்கிழமை உத்தரவு பி... மேலும் பார்க்க