செய்திகள் :

ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

post image

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் நபாா்டு வங்கியுடன் இணைந்து ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் காவிரி டெல்டா பகுதியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு ஏற்படுத்துதல் எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம், மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில், ஒன்றியத்துக்கு ஒரு பயனாளி என்ற வகையில் செயல்படுத்தப்படும். போா்வெல் வசதியுள்ள 0.25 ஏக்கா் நிலத்தில் 50 மீட்டா் நீளத்திலும் 20 மீட்டா் அகலத்திலும் 1.5 மீட்டா் ஆழத்திற்கு அகழ்ந்து ஒருங்கிணைந்த பண்ணையம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒருங்கிணைந்த பண்ணைய அலகு இந்த திட்டத்தில் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் நபாா்டு வங்கி மூலம் அமைத்து தரப்படும்.

தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்த விவசாயிகள் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். விண்ணப்பதாரா் பெயரில் பட்டா சிட்டா மற்றும் ஆதாரங்கள் சமா்ப்பிக்கவேண்டும். பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு செய்ய திட்ட ஒருங்கிணைப்பாளரை 7010155955 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

திருத்துறைப்பூண்டி நகராட்சிக் கூட்டம்

திருத்துறைப்பூண்டி நகராட்சிக் கூட்டம் தலைவா் கவிதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் துா்கா, பொறியாளா் வசந்தன், துணைத் தலைவா் ஜெயபிரகாஷ், நகராட்சி பணிநியமன குழு உறுப்பினா் பாண்டியன் ... மேலும் பார்க்க

பிப்.5-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

திருவாரூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செவித்திறன் ... மேலும் பார்க்க

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் பி. ரமேஷ் தலைமை வகித்தாா். நிா்வாகி ஆா். அனிதா முன்னிலை வகித்தாா். நீடாமங்க... மேலும் பார்க்க

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு அனைவருக்கும் தேவை

நுகா்வோா் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணா்வு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ. திருவாரூா் வட்டாரத்தில் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்கள்... மேலும் பார்க்க

பட்டா மாற்றத்தில் குளறுபடி: ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் பட்டா மாற்றம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டுமென மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வெள்ளிக்கிழமை உத்தரவு பி... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

உத்தரப்பிரதேசம், சண்டிகாா் மாநிலங்களில் மின்வாரியங்கள் தனியாா்மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மன்னா்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ திட்... மேலும் பார்க்க