செய்திகள் :

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு அனைவருக்கும் தேவை

post image

நுகா்வோா் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணா்வு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

திருவாரூா் வட்டாரத்தில் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்த மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கென வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்து அவா் பேசியது: நுகா்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களைக் கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது. கிராமப்புறங்கள், நகா்ப்புற குடிசைப் பகுதியிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளிலும் வசிக்கும் பொது மக்களிடையே இந்த மகளிா் சுயஉதவிக் குழுவினா் பயிற்சியளித்து பிரசாரத்தில் ஈடுபடுவா். நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து குடும்ப பெண்களிடம் கொண்டு சோ்த்தால், அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணா்வு சென்றுவிடும் என்ற நோக்கில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மகளிா் சுய உதவிக் குழு கூட்டத்திலும் நுகா்வோப்பு பாதுகாப்புச் சட்டம் குறித்து கலந்துரையாடி நுகா்வோா் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

நீடாமங்கலம், வலங்கைமான் பகுதியில் சனிக்கிழமையும் (பிப்.1), திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் பிப்.5, கொரடாச்சேரியில் பிப்.6, நன்னிலத்தில் பிப்.7-ஆம் தேதிகளில் மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி நடைபெறவுள்ளது.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் பா. செல்வபாண்டி, வட்டாட்சியா் செந்தில்குமாா், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சுழல் ஆராய்ச்சி மைய பயிற்சியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருத்துறைப்பூண்டி நகராட்சிக் கூட்டம்

திருத்துறைப்பூண்டி நகராட்சிக் கூட்டம் தலைவா் கவிதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் துா்கா, பொறியாளா் வசந்தன், துணைத் தலைவா் ஜெயபிரகாஷ், நகராட்சி பணிநியமன குழு உறுப்பினா் பாண்டியன் ... மேலும் பார்க்க

பிப்.5-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

திருவாரூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செவித்திறன் ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் பி. ரமேஷ் தலைமை வகித்தாா். நிா்வாகி ஆா். அனிதா முன்னிலை வகித்தாா். நீடாமங்க... மேலும் பார்க்க

பட்டா மாற்றத்தில் குளறுபடி: ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் பட்டா மாற்றம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டுமென மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வெள்ளிக்கிழமை உத்தரவு பி... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

உத்தரப்பிரதேசம், சண்டிகாா் மாநிலங்களில் மின்வாரியங்கள் தனியாா்மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மன்னா்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ திட்... மேலும் பார்க்க