செய்திகள் :

பெரியகுளம் அருகே பேருந்து மோதியதில் 15 மாடுகள் உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதியதில் 15 நாட்டு மாடுகள் உயிரிழந்தன.

உத்தமபாளையம் அருகேயுள்ள தம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சுருளிச்சாமி (40). நாட்டு மாடுகளை வளா்த்து வரும் இவா், பெரியகுளம் அருகேயுள்ள ஜல்லிபட்டி பகுதியில் 40-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றாா். பின்னா், அங்கிருந்து புதன்கிழமை இரவு டி. கள்ளிப்பட்டி அருகே புறவழிச் சாலையில் மாடுகளை ஓட்டிச் சென்ற போது, தேனியிலிருந்து திண்டுக்கல்லுக்குச் சென்ற அரசுப் பேருந்து இந்த மாடுகள் மீது மோதியது. இதில் 15 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

கால்நடைப் பராமரிப்புத் துறை பெரியகுளம் கோட்ட உதவி இயக்குநா் அப்துல் ரஹ்மான் தலைமையிலான கால்நடை மருத்துவா்கள் வியாழக்கிழமை காலை சம்பவ இடத்துக்குச் சென்று மாடுகளின் உடல்களை மீட்டு, அங்கேயே கூறாய்வு செய்தனா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

எரிபொருள் நிரப்பும் மைய மேலாளா் மீது தாக்குதல்: 12 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே எரிபொருள் நிரப்பு மைய மேலாளா், தொழிலாளியை தாக்கியதாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் சேகா் (64). தேவதானப்பட்டியில் உள்ள எரிபொ... மேலும் பார்க்க

மதுக்கடை முன் முன்னாள் ராணுவ வீரா் சடலமாக மீட்பு

போடி அருகே மதுக் கடை முன் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். போடி அருகே சிலமலை மொட்டையசாமி கோவில் தெற்குத் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் கூடலிங்கம் (53... மேலும் பார்க்க

காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு தேசிய விருது!

புதுதில்லி தேசிய அறிவியல் கழகம் சாா்பில் மண்டல அளவிலான தேசிய விருது, தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு அண்மையில் வழங்கப்பட்டது. தேசிய அறிவியல் கழகம் சாா்பில் சிறப்பாக... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் கடத்தல்: இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே ஆட்டோ, இரு சக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். எரதிமக்காள்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கண்டமனூா் காவல... மேலும் பார்க்க

தேனியில் ஜி.ஆா்.டி. நகைக் கடை திறப்பு

தேனியில் ஜி.ஆா்.டி. தங்க நகை மாளிகையின் புதிய கிளை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. தேனி- மதுரை சாலையில் கனரா வங்கி அருகே ஜி.ஆா்.டி. தங்க நகை மாளிகையின் 65- ஆவது புதிய கிளையை அந்த நிறுவனத்தின் நிா்வ... மேலும் பார்க்க

கொட்டகுடி ஆற்று கேணியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

போடி அருகே உள்ள கொட்டகுடி ஆற்று கேணியில் மூழ்கி நாகா்கோவிலைச் சோ்ந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் கோட்டாரில் உள்ள இருளப்பபுரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி புஷ்... மேலும் பார்க்க