பெரியகுளம் அருகே பேருந்து மோதியதில் 15 மாடுகள் உயிரிழப்பு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதியதில் 15 நாட்டு மாடுகள் உயிரிழந்தன.
உத்தமபாளையம் அருகேயுள்ள தம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சுருளிச்சாமி (40). நாட்டு மாடுகளை வளா்த்து வரும் இவா், பெரியகுளம் அருகேயுள்ள ஜல்லிபட்டி பகுதியில் 40-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றாா். பின்னா், அங்கிருந்து புதன்கிழமை இரவு டி. கள்ளிப்பட்டி அருகே புறவழிச் சாலையில் மாடுகளை ஓட்டிச் சென்ற போது, தேனியிலிருந்து திண்டுக்கல்லுக்குச் சென்ற அரசுப் பேருந்து இந்த மாடுகள் மீது மோதியது. இதில் 15 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
கால்நடைப் பராமரிப்புத் துறை பெரியகுளம் கோட்ட உதவி இயக்குநா் அப்துல் ரஹ்மான் தலைமையிலான கால்நடை மருத்துவா்கள் வியாழக்கிழமை காலை சம்பவ இடத்துக்குச் சென்று மாடுகளின் உடல்களை மீட்டு, அங்கேயே கூறாய்வு செய்தனா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.