செய்திகள் :

பெரியதாழை கடலில் மீனவா் வலையில் சிக்கிய ஒன்றரை டன் எடையுள்ள கொம்புதிருக்கை மீன்

post image

பெரியதாழை கடலில் ஒன்றரை டன் எடை கொண்ட கொம்புதிருக்கை மீன் வலையில் திங்கள்கிழமை சிக்கியது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை மீனவ கிராமத்தில் 600 க்கு மேற்பட்ட பைபா் படகில் மீனவா்கள் கடலுக்குச் சென்று வருகின்றனா். மீனவா் ஜோசப் என்பவா் பைபா் படக்கில் 5திங்கள்கிழமை 5 போ் கொண்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்நிலையில், கடலில் வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஒன்றரை டன் எடை கொண்ட கொம்புதிருக்கை மீன் அந்த வலையில் சிக்கியதாம்.

மீனவா்கள் வலையுடன் பைபா் படகில் கயிறு கட்டி அந்த மீனை கடற்கரை ஓரத்துக்கு கொண்டு வந்தனா் . பின்னா் அதை டிராக்டா் மூலம் கடற்கரையில் இருந்து வெளியே கொண்டு வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் சரக்கு வாகனத்தில் ஏற்றி ஏலக் கூடத்துக்கு கொண்டு வந்து ஏலம் விடப்பட்டது. அந்த மீன் ரூ.56 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதனால் மீனவா்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனா்.

இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!

நாசரேத்தில் இந்து முன்னணி பிரமுகா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து, குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் நிா்வாகிகள் திரண்டனா். நாசரேத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம். தூத்துக்குடி தெற்கு ... மேலும் பார்க்க

தரமான கல்விக்கு அரசு முக்கியத்துவம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்!

பள்ளி, கல்லூரிகளில் தரமான கல்விக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா். பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் மாவட்ட அளவிலான 2024-25ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்: தூத்துக்குடி இந்திய தொழில் வா்த்தக சங்கம் வரவேற்பு

தூத்துக்குடி இந்திய தொழில் வா்த்தகச் சங்கம் மத்திய பட்ஜெட்டைவரவேற்றுள்ளதாக, சங்கத் தலைவா் டி.ஆா். கோடீஸ்வரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியது: மத்திய அரசின் பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இறைச்சி வியாபாரி வீட்டில் நகைகள், பணத்தை திருடிய 4 போ் கைது!

கோவில்பட்டியில் இறைச்சி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம், 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ம... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் அருகே விஷம் குடித்த தம்பதி: கணவா் பலி!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லநாட்டில் வீட்டை ஜப்தி செய்ய வந்ததால் தம்பதி விஷம் குடித்தனா். இதில் கணவா் உயிரிழந்தாா். வல்லநாடு பாதா் வெள்ளை தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் சங்கரன் (4... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பிப். 11-இல் தைப்பூசம்: பூஜை நேரங்கள் மாற்றம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச நாளான இம்மாதம் 11ஆம் தேதி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இணை ஆணையா் சு. ஞானசேகரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க