செய்திகள் :

பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் விடியோவை தவிர்த்திருக்கலாம்: ராஜேந்திர பாலாஜி

post image

முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் விடியோ வெளியிட்டது வருத்தமளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்து முன்னணி சாா்பில் மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையில் இந்து முன்னணி குறித்த ஒரு விடியோ ஒளிபரப்பப்பட்டது.

இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? என்று திமுக உள்ளிட்ட கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"முருகர் மாநாட்டில் வெளியிட்ட அந்த விடியோவை தயாரித்தது யார் என்று தெரியவில்லை. அடித்தட்டு மக்களை அதிகாரத்திற்கு கொண்டுவந்தவர் பேரறிஞர் அண்ணா. அதேபோல பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துகள் நிறைய இருக்கின்றன. அது சிலருக்கு பிடிக்கலாம், சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதன் வெளிப்பாடாக அந்த விடியோ இருக்கலாம்.

அண்ணா பல்வேறு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை சட்டப்பேரவை வரை கொண்டுவந்தவர். அண்ணாவின் கொள்கையை முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பின்பற்றியதால்தான் நானும் சட்டப்பேரவைக்குச் சென்று அமைச்சரானேன்.

அண்ணா இல்லையெனில் என்னைப் போன்ற நபர்கள் அரசியலுக்கு வந்திருக்க முடியாது.

முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்த ஒரு நிகழ்வை வைத்து அதன் 99% நல்ல கருத்துகளை புறக்கணிக்க முடியாது. எனினும் பெரியார், அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் விடியோ வெளியிட்டது வருத்தமளிக்கிறது. அந்த விடியோவை தவிர்த்திருக்கலாம்" என்று பேசியுள்ளார்.

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! புதினை சந்திக்கும் ஈரான் அமைச்சர்

கொள்கையை எப்போதும் விட்டுத்தரமாட்டார் இபிஎஸ்: முன்னாள் அமைச்சர் வேலுமணி

கொள்கையை எப்போதும் எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்கமாட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.முருகன் மாநாடு குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித... மேலும் பார்க்க

திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கம்! நிர்வாகிகள் நியமனம்!

திமுகவில் புதிதாக கல்வியாளர்கள் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவில் புதியதாக கல்வியாளர்கள் அணி மற்றும் மாற்றுத்... மேலும் பார்க்க

நீட் தேர்வில் பணம்தான் விளையாடுகிறது: மு.க. ஸ்டாலின்

நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.2025 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் முறைகேடு செய்து, பணத்தை பெற்றுக்கொண்டு... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானங்களை ஏற்கவில்லை: அதிமுக

முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கவில்லை என அதிமுக அறிவித்துள்ளது. மாநாட்டில், பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட விடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியா... மேலும் பார்க்க

குண்டர் தடுப்புச் சட்டத்துக்குள் சைபர் குற்றவாளிகள்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் வரவேற்பு

தமிழகத்தில் இணையவழி (சைபர்) குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாக அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை உ... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(ஜூன் 23)தமிழகத்தில் ஒருசில இட... மேலும் பார்க்க