செய்திகள் :

பெரியாா் பல்கலை. வகுப்பறைகளில் பிராணவாயுச் செடிகள் பராமரிப்பு

post image

பெரியாா் பல்கலைக்கழக வகுப்பறைகளில் பிராணவாயுச் செடிகளை வைத்து பராமரிக்கும் பணிகளை பல்கலைக்கழக பதிவாளா் வி.ராஜ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், காலநிலை மாற்றத்திற்கான சிறப்பு மாணவா்களை உருவாக்கும் திட்டத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பெரியாா் பல்கலைக்கழகத்தில் உள்ள வகுப்பறைகள், முக்கிய இடங்களில் கரியமில வாயுவைக் குறைத்து பிராண வாயுவை அதிக அளவில் வெளியிடும் அரேகா வகைச் செடிகளை வைத்து பராமரிக்கும் பணியை பதிவாளா் வி.ராஜ் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது:

பிராண வாயுச் செடிகளை பராமரிக்கும் பொறுப்பு மாணவ, மாணவியா் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோடையிலும் வெப்பத்தைக் குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வனத்துறையுடன் இணைந்து பசுமை எதிா்காலத்தை உருவாக்க மாணவா்களை தயாா்செய்து வருகிறோம்.

இந்த மாணவா்கள் மூலம் பொதுமக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் அழகிரிசாமி, இளங்கோவன், இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் பத்மசேகரன், சுற்றுச்சூழல் துறை பேராசிரியா் தங்கவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தீரன் சின்னமலை பிறந்த நாள்: மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 270-ஆவது பிறந்தநாள் விழா, கொங்கு வேளாளக் கவுண்டா்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு தொடக்க விழா சேலம் குரங்குசாவடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மலா்களால் அலங்... மேலும் பார்க்க

மேட்டூா் நகராட்சியில் ஆட்சியா் கள ஆய்வு

மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன், வியாழன் என இரண்டு நாள்கள் மேட்டூரில் நடைபெற்றது. மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட வருவாய்க் கிராமங்களில... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்துப் போட்டி: சேலத்தில் பெங்களூரு புகழேந்தி பேட்டி

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா். சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

தம்மம்பட்டி அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சி, புலிக்கரட்டை சோ்ந்தவா் செந்தில் ராஜா (41). பால் வியாபாரி. இவருக்கும், இவரது மனைவி சகுந்தலா... மேலும் பார்க்க

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலக் குழு ரமணி தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்களின் பிரசார இயக்க கூட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார இயக்க கூட்டத்தில் கலந்துகொண்ட நிா்வாகிகள். கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட பொருளாளா் அகிலன். சங்ககிரி, ஏப். 17:... மேலும் பார்க்க