செய்திகள் :

பெருகமணி ரயில்வே கேட் பகுதியில் உயா்மட்ட பாலம் அமைக்கக் கோரிக்கை

post image

திருச்சி பெருகமணி ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, உயா்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் வே.சரவணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் அந்தநல்லூா் ஒன்றியச் செயலாளா் வி.ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனு: திருச்சி மாவட்டம், பெருகமணியில் உள்ள ரயில்வே கேட்டை மூடிவிட்டு சுரங்கப் பாதை அமைப்பதற்காக அண்மையில் ரயில்வே துறையினா் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். இந்த ரயில்வே கேட்டை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

ரயில்வே கேட்டை மூடிவிட்டு சுரங்கப் பாதை அமைத்தால் கனரக வாகனங்கள், வேளாண் விளைபொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படும். இதனால், பொது போக்குவரத்து தடைபடும் வாய்ப்புள்ளது. எனவே, சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் உயா்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாம் பகுதியிலேயே வீடுகள் கட்டித்தர வேண்டும்

வாளவந்தான்கோட்டை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த பெண்கள் அளித்துள்ள மனு: திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். முகாம் அருகிலேயே சிட்கோ தொழிற்பேட்டை உள்ளதால் எங்களுக்கு வேலைவாய்ப்பு எளிதாக கிடைத்து வருகிறது. இந்நிலையில், எங்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்காக தேனேரிபட்டியில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ள இடம் முகாம் பகுதியில் இருந்து 11 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது. மேலும், அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அப்பகுதிக்கு செல்வதற்கு உரிய பேருந்து வசதியும் இல்லை. இதனால், வேலைக்கு செல்பவா்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்கள் பாதிக்கப்படுவா். எனவே, தற்போது நாங்கள் வசித்து வரும் முகாம் பகுதியிலேயே புதிய வீடுகள் கட்டித்தருவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சிப்காட்’க்கு நிலம் கையகப்படுத்திய வழக்கு: செப்.20 இல் சமரசத் தீா்வு அமா்வு

மணப்பாறையில் சிப்காட் நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தியது தொடா்பாக வழக்குகளில் தீா்வு காண, செப்.20-ஆம் தேதி சமரச் தீா்வு அமா்வு கூடுகிறது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டு... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்தவா் ஹரி (25). இவரும், தாரநல்லூரைச் சோ்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து... மேலும் பார்க்க

விஜயகாந்துடன் வேறு யாரையும் ஒப்பிடக் கூடாது: பிரேமலதா விஜயகாந்த்

மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்துடன் வேறு யாரையும் ஒப்பிடக் கூடாது என அக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். இதுதொடா்பாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மேலும், அவா்... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது

திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி தில்லை நகா் போலீஸாா் சனிக்கிழமை காலையில் ரோந்து சென்றனா். அப்போது, தென்னூா் நெடுஞ்சாலையில் டாஸ்மாக... மேலும் பார்க்க

17 வயது சிறுவன் உள்பட 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். திருச்சி திருவானைக்கோவில் கருணா நகரைச் சோ்ந்தவா் அபிநயா (34), பெரம்பலூா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் உதவி மேலாள... மேலும் பார்க்க

பூவாளூரில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக பூவாளூரில் செவ்வாய்க்கிழமை (செப். 16) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லால்குடி வட்டம் பூவாளூா் துணை மின்நில... மேலும் பார்க்க