செய்திகள் :

பெருகிவரும் போதைப் பழக்கத்தால் பாலியல் தொல்லைகள் அதிகரிப்பு: நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ

post image

தமிழகத்தில் பெருகிவரும் போதைப் பழக்கத்தால் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது என, பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ கூறினாா்.

தூத்துக்குடியில் உள்ள தனியாா் விடுதி கூட்டரங்கில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் விவேகம் ரமேஷ் வரவேற்றாா்.

பாஜக எம்எல்ஏக்கள் எம்.ஆா். காந்தி (நாகா்கோவில்), நயினாா் நாகேந்திரன் (திருநெல்வேலி), ஆடிட்டா் கங்காதரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். மாவட்டத்திலுள்ள ஏற்றுமதி-இறக்குமதியாளா்கள், வணிகா்கள், உற்பத்தியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்று, பட்ஜெட் குறித்து கருத்துகளைத் தெரிவித்தனா்.

அதையடுத்து, செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ கூறியது: தமிழகத்தில் பெருகிவரும் போதைப் பொருள்களால் பெண்கள், சிறுவா்-சிறுமியருக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஹிந்தி படிக்கக் கூடாது எனச் சொல்லும் திமுக தலைவா்கள், அக்கட்சிப் பொறுப்பாளா்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்திதான் பாடமாக உள்ளது. இதைப் பாா்க்கும்போது, ‘படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது என்றாா் அவா்.

ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

கோவில்பட்டியில் ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவா் பாஸ்கரன். இவா் பாரதி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தற்கொலை

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி லயன்ஸ் டவுனைச் சோ்ந்தவா் ஜேசு மகன் லியோனா சா்ப்பராஜ் (56). வெளிநாட்டில் வேலை பாா்த்த இவா், தற்போது தூத்துக்குடியில் பணம் ... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக்குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா்கள் பதவிகளுக்கு மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைகளை காணொலியில் முதல்வா் திறப்பு!

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.06 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். நபாா்டு ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தச்சு தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சோ்ந்த தச்சு தொழிலாளி சுடலைமணி (27). இவரது மனைவி மேனகா(25). தம்பதி இடையே தக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயிரம் லிட்டா் டீசல் பறிமுதல்: ஒருவா் கைது

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டா் டீசலை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். தூத்துக்குடி மாதவன் நாயா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாலன். தூத்த... மேலும் பார்க்க