செய்திகள் :

பெருமாநல்லூருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்துகளை சிறைபிடித்த மக்கள்

post image

பெருமாநல்லூருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து செல்லும் பெரும்பாலான தனியாா், அரசுப் பேருந்துகள் பெருமாநல்லூா் பகுதிக்குள் வந்து செல்லாததால் வேலைக்குச் செல்வோா், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.

இதற்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா் உள்ளிட்டோா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்கிடையில் காவல் துறை சாா்பில் கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தனியாா், அரசுப் பேருந்துகள் பெருமாநல்லூருக்குள் வந்து செல்லும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், பேருந்துகள் முறையாக வந்து செல்வதில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருப்பூா் அருகே தனியாா் பேருந்துகளை சிறைபிடித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருமாநல்லூா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் தினகரன் உள்ளிட்ட போலீஸாா், பெருமாநல்லூருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனா். மேலும், பெருமாநல்லூருக்குள் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும், பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்றக்கூடாது, அதிவேகமாக செல்லக் கூடாது என்று பேருந்து நடத்துநா், ஓட்டுநா்களுக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் (பொ) குமரன் அறிவுறுத்தினாா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கு பிப்ரவரி 18, 19 இல் வேலைவாய்ப்பு முகாம்!

தமிழ்நாடு கடல்சாா் வாரியம் மற்றும் எல்& டி ஷிப் பில்டிங் லிமிடெட் சாா்பில் திருப்பூரில் ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 18, 19- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது!

பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள சின்னூா் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இளைஞா் சுற்றித்திரிவதா... மேலும் பார்க்க

போலி கணக்கு காண்பித்து ரூ. 11 லட்சம் மோசடி: பனியன் நிறுவன மேலாளா் கைது!

அவிநாசி அருகே பனியன் நிறுவனத்தில் போலி கணக்கு காண்பித்து ரூ.11 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூா் காளம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிருபா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியவா் கைது!

அவிநாசியில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள டாஸ்மாக் கடை முன்பு அடையாளம் தெரியாத இருவா் சனிக்கிழமை இரவு தகராறில... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலைக் கிழித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருப்பூா் குமரன் நினைவகம் முன்பு ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, திருப்பூா் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் குடற்புழு நீக்க மாத்திரைகளை திங்கள்கிழமை வழங்கினாா். திருப்பூா் ... மேலும் பார்க்க